ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

பேருந்து செய்த பாவம்?

மரியாதைக்குரியவர்களே,
             
                           வணக்கம். பேருந்து!


              
                   ( ஏதுமறியா அப்பாவிப் பேருந்துகளுக்கு சேதம் விளைவிக்கும் அறிவாளிகளே சிந்தியுங்க! நீங்க பேருந்துகளிலேயே பயணிக்க மாட்டீர்கள் உங்க உறவு மற்றும் குடும்பம் பேருந்துகளில் ஏறவே ஏறாது அப்படித்தானே?)
அவசியம் அரசியல்வாதிகளும்,சமூக நல அமைப்புகளும்,தன்னார்வலர்களும்,இளைய சமூகமும் ,அரசுத்துறைகளும்,எந்த நிகழ்வுகளுக்கும் பேருந்துகளுக்கு சேதப்படுத்துவதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.சிந்தனை செய்து ,உரியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் உரிய தண்டனை வழங்கவும் நிர்ப்பந்திக்க வேண்டும்.,மக்களுக்கு துரோகம் செய்வதாக விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.
                    ஆமாங்க இதற்குத்தான் எத்தனை சோதனையும்,வேதனையும்!?! சிந்தித்துப்பாருங்க சான்றோர்களே, ஒரு தனி மனிதனின் பிரச்சினை என்றாலும் சரி,குடும்பப்பிரச்சினை என்றாலும் சரி,தெருப்பிரச்சினை என்றாலும் சரி,உள்ளூர்ப்பிரச்சினை என்றாலும் சரி,பக்கத்துவீட்டுப்பிரச்சினை என்றாலும் சரி,குடிநீர்ப்பிரச்சினை என்றாலும் சரி,கோர்ட் பிரச்சினை என்றாலும் சரி,சங்கத்தின் பிரச்சினை என்றலும் சரி,சாதிகளின் பிரச்சினை என்றாலும் சரி,கட்சிகளின் பிரச்சினை என்றாலும் சரி,காவல்துறை பிரச்சினை என்றாலும் சரி,எவரெவருக்கோ பிரச்சினை என்றாலும் இங்கே எவரிடமோ  பாராட்டு பெறலாம் என்ற கணிப்பில்? தினமும் தனக்கு உட்பட தன் குடும்பம் சகிதம் சமூகத்திற்கே தினசரி இரவு பகல் எந்நேரமும் அயராது சேவை என்னும் அத்தியாவசியப்பணி புரிந்து உதவிடும் பயணத்தின் ராஜா பேருந்துகளைத்தாங்க தீ வைத்து எரிக்கிறாங்க? கல்லெறிந்து சேதப்படுத்தறாங்க?? பயணிப்பவர்களின் வேதனை தெரிந்தும் தெரியாதவர்கள் போல பாவனை செய்துகொண்டு ஏதோ ஆத்திரத்தில் தீ வைப்பவர்களைப் போன்று நடிக்கிறாங்க?,லாரிகளை நொறுக்குறாங்க!, போக்குவரத்தினைத்தாங்க முடக்குறாங்க!

மனம் உடையும் போதெல்லாம்
என் கண்ணாடிகளை உடைகிறார்கள்
என்னை முழுவதும் எரிக்கிறார்கள்
இதனால் சமாதானம் அடைகிறார்கள்

என் உடைந்த கண்ணாடி சில்லுகளும்
என் எறிந்த உடலின் சாம்பல்களும்
உடைந்த மனதை ஓட்டவைத்ததா..??

இல்லையே...
மாறாக என்னை நம்பி என் மீது ஏறி
பயணித்தவர்களை பயணம் முடியும்
முன்னே பாதி வழியில் இறக்கிதான் விட்டது...

கல்லை எறிந்தவனே... தீயை வைத்தவனே...
நாளை நீயும் உன் பெண்டு,பிள்ளைகள் என் மீது தான்
பயணம் செய்ய வேண்டும் என்பதை
மட்டும் ஏன் மறந்தாய்...???

எனக்காக ஏங்கும் கிராமங்கள் எத்தனை
நான் வருவேனா என காத்திருக்கும்
உள்ளங்கள் எத்தனை அறிவாயா..???
என்றேனும் என் வலி உணர்வாயா...???

இப்படிக்கு....
பேருந்து......

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                  தங்களுக்கு ஆத்திரமூட்டும் செயலை செய்தவருக்கு கண்டனம் தெரிவிக்க இப்படியா! ஏதுமறியா அப்பாவித்தனமான அதுவும் பொதுமக்களுக்கு தினமும் சேவை செய்யும் உயர்நிலை சாதனமான குறிப்பாக அரசுப்பேருந்துகளை தீ வைத்துக்கொளுத்துவது!!,அடித்து நொறுக்கி சேதப்படுத்துவது, எவ்விதத்தில் நியாயம்? அரசுப்பேருந்துகள் தங்களது வெறுப்புக்கு ஆளானவர்களின் சொத்தா? நம்ம மக்களின் வரிப்பணமான மக்களின் தினசரி அத்தியாவசிய சேவைநிறுவனத்தின் சாதனமான பேருந்துகளை ஏன் இவ்வாறு அழிக்கவேண்டும்? பேருந்துகளா வழக்கு போட்டது? தீர்ப்பு சொன்னது? எப்படிங்க எங்கே எது நடந்தாலும் உடனே பேருந்துகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முடிகிறது.பேருந்துகளை எல்லாம் தீ வைக்கும் நீங்க மதுபானக்கடைக்கு மட்டும் பாதுகாப்பு கொடுத்து நிதானமாக குடித்துவருகிறீர்களே!?!?!?..........அப்படியானால் பேருந்துகளுக்கு தீவைப்பது ,உண்மையிலேயே ஆத்திரத்தால்தானா?அல்லது திட்டமிட்ட சதிதானா? கொஞ்சம் யோசியுங்க..எறிந்தவனை விட்டுட்டு எறிகல்லை நோவது எப்படி தங்களால் மட்டும் சாத்தியமாகிறது????ஒன்றுமே விளங்கமாட்டேன்ங்குதுங்க????????
 
 
சட்டம் ஒழுங்கு இல்லை.
  • நீங்கள், கரூர் ரங்கசாமி, மேலும் வேறு 2 பேர்கள் பேரும் இதனை விரும்புகிறீர்கள்.
  •  
    Parameswaran Driver மரியாதைக்குரியவர்களே,வணக்கம். பேருந்து நமக்காக மக்களுக்காக அல்லும் பகலும் இருபத்திநான்கு மணி நேரமும் அயராது சேவை செய்யும் அத்தியாவசியத் தேவை என்பதை உணர்ந்த நாம் தீ வைப்பது நியாயமா?சம்பந்தப்படவர்களை விட்டுவிட்டு பேருந்துகளுக்கு மட்டும் ஏன் இவ்வாறு கொடுமை செய்கிறோம்??சிந்தியுங்க,தங்களது ஆத்திரத்தை எங்கு காட்ட வேண்டுமோ அங்கு காட்டுங்க அதற்காக ஏதுமறியா அப்பாவியான பேருந்தும் அதில் பயணிக்கும் அப்பாவி பொதுஜனங்களும் என்ன தவறு செய்தாங்க??டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்கும் நாம் அரசுப்பேருந்துகளுக்கு மட்டும் ஏனோ மறந்துவிடுகிறோம்....சிந்தித்துப்பாருங்க,இனியாவது சிந்தித்து ப்பழகுங்க????? இப்படிக்கு ,,வெட்கமும் வேதனையும் நிறைந்த அன்பன் ....
     

    அதிமுக போராட்டத்தால் மக்கள் அதிருப்தி: 'வேண்டாமே சோகம்-வேண்டும் விவேகம்'

    Comment (16)   ·   print   ·   T+  
    சிதம்பரத்தில் நடந்த வன்முறையில் சேதமடைந்த அரசு பேருந்து| படம்:டி.சிங்காரவேலு.
    சிதம்பரத்தில் நடந்த வன்முறையில் சேதமடைந்த அரசு பேருந்து| படம்:டி.சிங்காரவேலு.
    சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதையடுத்து அதிமுகவினரின் சோகமும் அவர்கள் அதை வெளிப்படுத்தும் விதமும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது.
    தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டது கட்சித் தொண்டர்களுக்கு மட்டுமல்லாது நடுநிலையாளர்களுக்கும் வருத் தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே சமயம் எந்தவித சோதனை யிலிருந்தும் மீளும் துணிச்சலும் ஆற்றலும் பெற்ற ஜெயலலிதா சிறையில் இயல்பாக இருக்கிறார்.
    ஆனால், இங்குள்ள அவரது கட்சியினரோ நிதானம் தவறி நடந்து அவருக்கு பெருத்த ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
    உண்ணாவிரதப் பந்தல்களிலும் பத்திரிகைப் பேட்டிகளிலும் இதைப் பொய் வழக்கு என்றும், சட்டம் தெரியாமல் நீதிபதி தீர்ப்பளித் தார் என்றும் கடுமையான வார்த்தை களைப் பயன்படுத்துகின்றனர்.
    இது நீதித் துறையில் இருப்பவர் களை சினம் கொள்ளச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் கருது கின்றனர்.
    தமிழகத்தின் நிர்வாகம் செயலி ழந்துவிடக்கூடாது, அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுடன் மத்திய அரசு இடையில் புகுந்து விடக்கூடாது என்பதற்காக ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக பதவியேற்க சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. அத்துடன் பெங்களூர் சிறையில் உள்ள சக கைதிகளிடம் சகஜமாக உரையாடியிருக்கிறார். சசிகலா, இளவரசி ஆகியோருக் கும் ஆறுதல் சொல்லி தைரியம் ஊட்டியிருக்கிறார். இதையெல் லாம் அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களது கருத்துகளாலும் போராட் டங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் கருதுகின்றனர்.
    இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கூறியதாவது:
    நீதித்துறையையும் சம்பந்தமே இல்லாமல் பிற அரசியல் கட்சி களையும் வம்புக்கிழுக்கும் வகை யில் சுவரொட்டிகளை ஒட்டி, ஜெயலலிதா மீது அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களுக்கு இருக்கும் அனுதாபத்தைக் குலைத்துவிடக் கூடாது. மக்களிடம் இப்போது ஏற்பட்டுள்ள அனுதாபத்தைக் கணக்கில் கொண்டு ஒருவேளை, விரைவிலேயே சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலை நடத்துவது என்று ஜெயலலிதா முடிவெடுத் தால் அதற்கு உதவும் வகையில் அமைச்சர்களும் கட்சி நிர்வாகி களும் அனைத்து தொகுதிகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் இப்போதிலிருந்தே உழைக்க வேண்டும்.
    பெங்களூர் செல்ல வேண்டாம்
    கார்களில் அணிவகுத்து பெங்க ளூர் செல்வதை அதிமுகவினர் நிறுத்த வேண்டும். இது நிச்ச யம் கர்நாடக மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுடன் கட்சித் தலை வரையும் கேலிப் பொருளாக்கி விடும். உண்ணாவிரதம் இருப்பது, ஒப்பாரி வைப்பது போன்றவற்றை யும் நிறுத்த வேண்டும். இவற்றால் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அனு தாபம் எரிச்சலாகவும் கோபமாகவும் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.
    காந்தி ஜெயந்தியன்று நாடு முழுவதும் துப்புரவு இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் தமிழ்நாட்டில் அதை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டுவதால் மக்கள் ஆதரவு தானாகவே திரளும்.
    சுவரொட்டிகள் மூலமும் பத்திரிகை விளம்பரங்கள் மூலமும் தங்களுடைய விசுவாசத்தைக் காட்ட வரம்புமீறி பயன்படுத்தும் வாசகங்கள் அவரை நிரந்தரக் கைதியாக்கிவிடும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.
    மக்கள் அவதி:
    ஜெயலலிதா கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் திரையுலகினர் சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய வர்கள் அதிமுகவினரை மிஞ்சும் வகையில் நீதித் துறையை விமர்சித்து கருத்து தெரிவித்தனர். இதுபோதா தென்று, அந்த பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப் பட்டது. மருத்துவமனை, அண்ணா சாலை போன்ற முக்கிய இடங்களுக்கு கடற் கரை சாலையில் இருந்து வருபவர்கள் நீண்ட தூரம் சுற்றி வரவேண்டியிருந்தது. இதில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் விதிவிலக்கல்ல. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக