ஞாயிறு, 28 செப்டம்பர், 2014



Advertisement



மரியாதைக்குரியவர்களே,வணக்கம். ஜெ.ஜெ வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்........

29 செப்
2014
05:23
பதிவு செய்த நாள்
செப் 28,2014 00:24

 
                      பெங்களூரு: பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற, 11 மாதங்களில், பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார், நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக, ஜான் மைக்கேல் டி குன்ஹா, 2013 அக்டோபரில் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின், வழக்கின் வேகம் சூடுபிடித்தது. கடந்த, 11 மாதமாக, இடைவிடாமல் வழக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பை அறிவித்துள்ளார்.

அதேநேரத்தில், வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், அடிக்கடி மனு போட்டதால், இவர் எரிச்சலடைந்தார். அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு இரு நாள் சம்பளம் அபராதமாக விதித்தார். சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது, தினமும் பல மணி நேரம் பணியாற்றினார்.வழக்கு விசாரணை முக்கியம் என்பதால், நீதிமன்றத்தில் வழக்கமாக பணி செய்யும் டைப்பிஸ்டை கூட மாற்றி, தனக்கு நம்பகமானவரை, டைப்பிஸ்டாக வைத்து கொண்டார். கடைசியாக அவரே தீர்ப்பை, 'டைப்' செய்ததாக தெரிகிறது.

இவர், பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், பெங்களூரு மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மற்றும் மூன்று பேருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, ஐந்தாவது நீதிபதி இவர்.தீர்ப்பு நாள் நெருங்க நெருங்க, கோரமங்களாவில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் சொந்த ஊர் மங்களூரு. 1985ல் வழக்கறிஞராக பணியை துவக்கிய இவர், 2002ல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சிறப்பு நீதிபதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முன், தார்வாட், பெல்லாரி மற்றும் பெங்களூருவில், உயர் நீதிமன்ற (விஜிலென்ஸ் பிரிவு) பதிவாளர் உட்பட, பல நிலைகளில் பணியாற்றி உள்ளார்.அபத்தமான செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்ற பெயர் கொண்ட குன்ஹா, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிக்கும்போது, அரசு தரப்பினரிடம் மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், பலமுறை கடுமையாக நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து செய்த பாவம்?

மரியாதைக்குரியவர்களே,
             
                           வணக்கம். பேருந்து!


              
                   ( ஏதுமறியா அப்பாவிப் பேருந்துகளுக்கு சேதம் விளைவிக்கும் அறிவாளிகளே சிந்தியுங்க! நீங்க பேருந்துகளிலேயே பயணிக்க மாட்டீர்கள் உங்க உறவு மற்றும் குடும்பம் பேருந்துகளில் ஏறவே ஏறாது அப்படித்தானே?)
அவசியம் அரசியல்வாதிகளும்,சமூக நல அமைப்புகளும்,தன்னார்வலர்களும்,இளைய சமூகமும் ,அரசுத்துறைகளும்,எந்த நிகழ்வுகளுக்கும் பேருந்துகளுக்கு சேதப்படுத்துவதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.சிந்தனை செய்து ,உரியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் உரிய தண்டனை வழங்கவும் நிர்ப்பந்திக்க வேண்டும்.,மக்களுக்கு துரோகம் செய்வதாக விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.
                    ஆமாங்க இதற்குத்தான் எத்தனை சோதனையும்,வேதனையும்!?! சிந்தித்துப்பாருங்க சான்றோர்களே, ஒரு தனி மனிதனின் பிரச்சினை என்றாலும் சரி,குடும்பப்பிரச்சினை என்றாலும் சரி,தெருப்பிரச்சினை என்றாலும் சரி,உள்ளூர்ப்பிரச்சினை என்றாலும் சரி,பக்கத்துவீட்டுப்பிரச்சினை என்றாலும் சரி,குடிநீர்ப்பிரச்சினை என்றாலும் சரி,கோர்ட் பிரச்சினை என்றாலும் சரி,சங்கத்தின் பிரச்சினை என்றலும் சரி,சாதிகளின் பிரச்சினை என்றாலும் சரி,கட்சிகளின் பிரச்சினை என்றாலும் சரி,காவல்துறை பிரச்சினை என்றாலும் சரி,எவரெவருக்கோ பிரச்சினை என்றாலும் இங்கே எவரிடமோ  பாராட்டு பெறலாம் என்ற கணிப்பில்? தினமும் தனக்கு உட்பட தன் குடும்பம் சகிதம் சமூகத்திற்கே தினசரி இரவு பகல் எந்நேரமும் அயராது சேவை என்னும் அத்தியாவசியப்பணி புரிந்து உதவிடும் பயணத்தின் ராஜா பேருந்துகளைத்தாங்க தீ வைத்து எரிக்கிறாங்க? கல்லெறிந்து சேதப்படுத்தறாங்க?? பயணிப்பவர்களின் வேதனை தெரிந்தும் தெரியாதவர்கள் போல பாவனை செய்துகொண்டு ஏதோ ஆத்திரத்தில் தீ வைப்பவர்களைப் போன்று நடிக்கிறாங்க?,லாரிகளை நொறுக்குறாங்க!, போக்குவரத்தினைத்தாங்க முடக்குறாங்க!

மனம் உடையும் போதெல்லாம்
என் கண்ணாடிகளை உடைகிறார்கள்
என்னை முழுவதும் எரிக்கிறார்கள்
இதனால் சமாதானம் அடைகிறார்கள்

என் உடைந்த கண்ணாடி சில்லுகளும்
என் எறிந்த உடலின் சாம்பல்களும்
உடைந்த மனதை ஓட்டவைத்ததா..??

இல்லையே...
மாறாக என்னை நம்பி என் மீது ஏறி
பயணித்தவர்களை பயணம் முடியும்
முன்னே பாதி வழியில் இறக்கிதான் விட்டது...

கல்லை எறிந்தவனே... தீயை வைத்தவனே...
நாளை நீயும் உன் பெண்டு,பிள்ளைகள் என் மீது தான்
பயணம் செய்ய வேண்டும் என்பதை
மட்டும் ஏன் மறந்தாய்...???

எனக்காக ஏங்கும் கிராமங்கள் எத்தனை
நான் வருவேனா என காத்திருக்கும்
உள்ளங்கள் எத்தனை அறிவாயா..???
என்றேனும் என் வலி உணர்வாயா...???

இப்படிக்கு....
பேருந்து......

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                  தங்களுக்கு ஆத்திரமூட்டும் செயலை செய்தவருக்கு கண்டனம் தெரிவிக்க இப்படியா! ஏதுமறியா அப்பாவித்தனமான அதுவும் பொதுமக்களுக்கு தினமும் சேவை செய்யும் உயர்நிலை சாதனமான குறிப்பாக அரசுப்பேருந்துகளை தீ வைத்துக்கொளுத்துவது!!,அடித்து நொறுக்கி சேதப்படுத்துவது, எவ்விதத்தில் நியாயம்? அரசுப்பேருந்துகள் தங்களது வெறுப்புக்கு ஆளானவர்களின் சொத்தா? நம்ம மக்களின் வரிப்பணமான மக்களின் தினசரி அத்தியாவசிய சேவைநிறுவனத்தின் சாதனமான பேருந்துகளை ஏன் இவ்வாறு அழிக்கவேண்டும்? பேருந்துகளா வழக்கு போட்டது? தீர்ப்பு சொன்னது? எப்படிங்க எங்கே எது நடந்தாலும் உடனே பேருந்துகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முடிகிறது.பேருந்துகளை எல்லாம் தீ வைக்கும் நீங்க மதுபானக்கடைக்கு மட்டும் பாதுகாப்பு கொடுத்து நிதானமாக குடித்துவருகிறீர்களே!?!?!?..........அப்படியானால் பேருந்துகளுக்கு தீவைப்பது ,உண்மையிலேயே ஆத்திரத்தால்தானா?அல்லது திட்டமிட்ட சதிதானா? கொஞ்சம் யோசியுங்க..எறிந்தவனை விட்டுட்டு எறிகல்லை நோவது எப்படி தங்களால் மட்டும் சாத்தியமாகிறது????ஒன்றுமே விளங்கமாட்டேன்ங்குதுங்க????????
 
 
சட்டம் ஒழுங்கு இல்லை.
  • நீங்கள், கரூர் ரங்கசாமி, மேலும் வேறு 2 பேர்கள் பேரும் இதனை விரும்புகிறீர்கள்.
  •  
    Parameswaran Driver மரியாதைக்குரியவர்களே,வணக்கம். பேருந்து நமக்காக மக்களுக்காக அல்லும் பகலும் இருபத்திநான்கு மணி நேரமும் அயராது சேவை செய்யும் அத்தியாவசியத் தேவை என்பதை உணர்ந்த நாம் தீ வைப்பது நியாயமா?சம்பந்தப்படவர்களை விட்டுவிட்டு பேருந்துகளுக்கு மட்டும் ஏன் இவ்வாறு கொடுமை செய்கிறோம்??சிந்தியுங்க,தங்களது ஆத்திரத்தை எங்கு காட்ட வேண்டுமோ அங்கு காட்டுங்க அதற்காக ஏதுமறியா அப்பாவியான பேருந்தும் அதில் பயணிக்கும் அப்பாவி பொதுஜனங்களும் என்ன தவறு செய்தாங்க??டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்கும் நாம் அரசுப்பேருந்துகளுக்கு மட்டும் ஏனோ மறந்துவிடுகிறோம்....சிந்தித்துப்பாருங்க,இனியாவது சிந்தித்து ப்பழகுங்க????? இப்படிக்கு ,,வெட்கமும் வேதனையும் நிறைந்த அன்பன் ....
     

    அதிமுக போராட்டத்தால் மக்கள் அதிருப்தி: 'வேண்டாமே சோகம்-வேண்டும் விவேகம்'

    Comment (16)   ·   print   ·   T+  
    சிதம்பரத்தில் நடந்த வன்முறையில் சேதமடைந்த அரசு பேருந்து| படம்:டி.சிங்காரவேலு.
    சிதம்பரத்தில் நடந்த வன்முறையில் சேதமடைந்த அரசு பேருந்து| படம்:டி.சிங்காரவேலு.
    சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதையடுத்து அதிமுகவினரின் சோகமும் அவர்கள் அதை வெளிப்படுத்தும் விதமும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது.
    தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டது கட்சித் தொண்டர்களுக்கு மட்டுமல்லாது நடுநிலையாளர்களுக்கும் வருத் தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே சமயம் எந்தவித சோதனை யிலிருந்தும் மீளும் துணிச்சலும் ஆற்றலும் பெற்ற ஜெயலலிதா சிறையில் இயல்பாக இருக்கிறார்.
    ஆனால், இங்குள்ள அவரது கட்சியினரோ நிதானம் தவறி நடந்து அவருக்கு பெருத்த ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
    உண்ணாவிரதப் பந்தல்களிலும் பத்திரிகைப் பேட்டிகளிலும் இதைப் பொய் வழக்கு என்றும், சட்டம் தெரியாமல் நீதிபதி தீர்ப்பளித் தார் என்றும் கடுமையான வார்த்தை களைப் பயன்படுத்துகின்றனர்.
    இது நீதித் துறையில் இருப்பவர் களை சினம் கொள்ளச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் கருது கின்றனர்.
    தமிழகத்தின் நிர்வாகம் செயலி ழந்துவிடக்கூடாது, அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுடன் மத்திய அரசு இடையில் புகுந்து விடக்கூடாது என்பதற்காக ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக பதவியேற்க சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. அத்துடன் பெங்களூர் சிறையில் உள்ள சக கைதிகளிடம் சகஜமாக உரையாடியிருக்கிறார். சசிகலா, இளவரசி ஆகியோருக் கும் ஆறுதல் சொல்லி தைரியம் ஊட்டியிருக்கிறார். இதையெல் லாம் அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களது கருத்துகளாலும் போராட் டங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் கருதுகின்றனர்.
    இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கூறியதாவது:
    நீதித்துறையையும் சம்பந்தமே இல்லாமல் பிற அரசியல் கட்சி களையும் வம்புக்கிழுக்கும் வகை யில் சுவரொட்டிகளை ஒட்டி, ஜெயலலிதா மீது அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களுக்கு இருக்கும் அனுதாபத்தைக் குலைத்துவிடக் கூடாது. மக்களிடம் இப்போது ஏற்பட்டுள்ள அனுதாபத்தைக் கணக்கில் கொண்டு ஒருவேளை, விரைவிலேயே சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலை நடத்துவது என்று ஜெயலலிதா முடிவெடுத் தால் அதற்கு உதவும் வகையில் அமைச்சர்களும் கட்சி நிர்வாகி களும் அனைத்து தொகுதிகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் இப்போதிலிருந்தே உழைக்க வேண்டும்.
    பெங்களூர் செல்ல வேண்டாம்
    கார்களில் அணிவகுத்து பெங்க ளூர் செல்வதை அதிமுகவினர் நிறுத்த வேண்டும். இது நிச்ச யம் கர்நாடக மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுடன் கட்சித் தலை வரையும் கேலிப் பொருளாக்கி விடும். உண்ணாவிரதம் இருப்பது, ஒப்பாரி வைப்பது போன்றவற்றை யும் நிறுத்த வேண்டும். இவற்றால் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அனு தாபம் எரிச்சலாகவும் கோபமாகவும் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.
    காந்தி ஜெயந்தியன்று நாடு முழுவதும் துப்புரவு இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் தமிழ்நாட்டில் அதை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டுவதால் மக்கள் ஆதரவு தானாகவே திரளும்.
    சுவரொட்டிகள் மூலமும் பத்திரிகை விளம்பரங்கள் மூலமும் தங்களுடைய விசுவாசத்தைக் காட்ட வரம்புமீறி பயன்படுத்தும் வாசகங்கள் அவரை நிரந்தரக் கைதியாக்கிவிடும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.
    மக்கள் அவதி:
    ஜெயலலிதா கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் திரையுலகினர் சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய வர்கள் அதிமுகவினரை மிஞ்சும் வகையில் நீதித் துறையை விமர்சித்து கருத்து தெரிவித்தனர். இதுபோதா தென்று, அந்த பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப் பட்டது. மருத்துவமனை, அண்ணா சாலை போன்ற முக்கிய இடங்களுக்கு கடற் கரை சாலையில் இருந்து வருபவர்கள் நீண்ட தூரம் சுற்றி வரவேண்டியிருந்தது. இதில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் விதிவிலக்கல்ல. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.



மதுரை அரசு போக்குவரத்து கழக எம்.டி.க்கு ரூ.1 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
Friday, May 24, 2013,
மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழக எம்.டி.க்கு (மேலாண்மை இயக்குனர்) உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் நடராஜன். மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 25 ஆண்டுகள் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து, 2000ம் ஆண்டில் விருப்ப ஓய்வில் சென்றார். அவருக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதிய பலன்கள் வழங்கவில்லை.
இதையடுத்து நடராஜன் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தார். விருப்ப ஓய்வு பெற்று 7 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க மறுத்து அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடராஜன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சிங்வி, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
குறைந்த சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளியை வழக்கு மேல் வழக்கு போட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்றாமல் தள்ளிப் போட்டுள்ளனர். ஒரு தொழிலாளி தனது கடும் உழைப்பால் சம்பாதித்த பணத்தை வழக்கிற்கு செலவு செய்ய நேர்ந்துள்ளது. இது சட்ட விரோதமானது. மனிதாபிமான செயலும் அல்ல.
விருப்ப ஓய்வுக்கு அனுமதித்துவிட்டு ஓய்வூதிய பலன்களை வழங்க மறுப்பது நியாயமல்ல. 10 ஆண்டாக அலைக்கழித்துள்ளதற்காக அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட எம்.டி.க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை ஓய்வூதிய பலன்களுடன் சேர்த்து 2 மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

news by one india tamil

ஓசூர், செப்.29-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூருக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட கர்நாடகா அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வெளியான தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகா அரசு பஸ்கள் ஓசூருக்கு இயக்குவது நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். ஓசூரில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படாததால் பெங்களூர் செல்லும் பயணிகள் பஸ் நிலையத்திலேயே தவித்தனர்.

இந்த நிலையில் நேற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தமிழக எல்லைப்பகுதியில் உள்ள ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கர்நாடக எல்லையில் அம்மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, 2-வது நாளாக ஓசூருக்கு கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோல் காலை வரை தமிழக அரசு பஸ்களும் பெங்களூருக்கு இயக்கப்படவில்லை. காலை 8 மணிக்கு பிறகு, குறைந்த அளவில் பஸ்கள் ஓசூர் பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த பஸ்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. அதே போல ஒருசில தமிழக அரசு பஸ்கள் பெங்களூர் நகருக்கு இயக்கப்பட்டன.

நேற்று முன்தினம் ஓசூர் நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. நேற்று காலை பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. சில இடங்களில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் பிற்பகலுக்கு மேல் ஒரு கும்பல் கடைகளை அடைக்குமாறு ரகளையில் ஈடுபட்டது. இதையடுத்து ஓசூர் நகர் முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

சனி, 27 செப்டம்பர், 2014

தெரிந்துகொள்வோம் :
ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-2014

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு 17-09-2014அன்று

அன்புடையீர்,
                        வணக்கம். 
              லோகு  டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 17-09-2014புதன்கிழமை அன்று மாலை 2.00மணி முதல் மாலை 6.00 மணி வரை
கோயமுத்தூர்-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கோவை DO ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் சத்தியமங்கலம்- ராயல் பெட்ரோலியம்-இந்தியன் ஆயில் பங்க் வளாகத்தில் நடைபெற்றது.
             கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறும் அனைவரும் நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்தும்,
 அரிமா K.லோகநாதன்-தலைவர்,
 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-சத்தியமங்கலம்.
  மற்றும் நிர்வாகி;-
       லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் மற்றும் 
வாகன புகை மாசு பரிசோதனை மையம் - 
சத்தியமங்கலம்
 ஈரோடு மாவட்டம்.
 தொடர்புக்கு, +91 9443021196

வியாழன், 10 ஜூலை, 2014

ஹெல்மெட்? பைக் ஓட்டிகளே!

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.இது சதீஷ் சென்னை அவர்களது பதிவுங்க.சதீஷ் சென்னை அவர்களுக்கு நன்றிங்க.
நேற்று சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மோட்டர் சைக்கிளில் அலுவல் பயணம்.  நாலுவழி பாதை என்னவோ வண்டி ஓட்டிட்டு போறதுக்கு நல்லா தான் இருக்கு. எதிர்த்தாப்பலே வண்டி எதுவும் வரலை. அகலமான ரோடு. சும்மா சல்லுன்னு போகுது வண்டி.

தண்டலம் தாண்டி போயிட்டு இருக்கும்போது எதிர் சைடில் ஒரு சூப்பர் காரு பாஸ் ஆச்சு.  அது என்ன வண்டின்னு லைட்டா திரும்பினேன். அவ்வளவு தான். எதிர்காத்தில் என் ஹெல்மெட்டோட வைசர் சட்டுன்னு மேலே தூக்கி, அதே வேகத்தில் ஹெல்மெட் எழும்ப ஆரம்பிச்சிருச்சு. தாடையோடு சேர்த்து பெல்ட் போட்டிருந்ததால் கழுத்தோடு மேலே தூக்கி, கண்ணை மறைச்சு, ரெண்டு செக்கண்டில் பேஜார் ஆயிருச்சு.  முகத்தை நேரா திருப்பி லெப்ட் ஹான்டால் ஹெல்மெட்டை பிடிச்சிகிட்டதால் கழுத்து தப்பிச்சுச்சு.

தப்பு என்னோடது தான்... ஸ்பீடை குறைக்காமலேயே தலையை திருப்பினது தப்பு தானே??  ஹெல்மெட்டு போட்டா தலையை அப்படி இப்படி திருப்பாம வண்டி ஓட்டனும்னு எவ்வளவு சொன்னாலும் புரியமாட்டேங்குது.

அது பரவாயில்லை... சென்னையில் இருக்கிற குண்டும் குழியும் மேடும் பள்ளமுமான ரோட்டில் ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டும்போது வண்டி ஜெர்க் அடிக்கும்போதெல்லாம் தலையை யாரோ தட்டிகிட்டே வர்ற மாதிரி ஒரு பீலிங் வருமே... தலைவலி!!  மனுஷங்களோட முக அமைப்பு பல விதமா இருந்தாலும், ஹெல்மெட் என்னமோ நாலே நாலு சைசில் தான் கிடைக்குது. (S,M,L,XL). அதை போட்டுக்கிட்டு டைட்டோ லூசோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே ஒட்டி தொலைக்க வேண்டியது தான்.

இன்னொரு அட்ஜஸ்ட்மேன்ட்டும் இருக்கு.  பைபர் கிளாஸ்சில் வைசர் பண்ணி வெச்சிருக்காங்களா... சீக்கிரமே டல் அடிச்சிருது.. அதனால் கண்ணையும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டே உத்து பாத்துகிட்டு தான் வண்டி ஓட்டனும் நாம.  சாயந்தரம் அஞ்சு மணி ஆயிடிச்சுன்னா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டறதே கஷ்டம்.  எதிரில் வர்ற வண்டிகளோட ஹெட் லைட் வெளிச்சம் பைபர் கிளாசில் வித்தை காட்டும்போது ரோடும் தெரியாது குண்டு குழியும் தெரியாது குறுக்கே பாயுற நம்ம ஜனங்களும் தெரியாது.  ரெம்ம்ம்மம்ப  கஷ்ட்டம்ம்ம்ம்..

மழை காலம் வந்தால் இன்னும் சூப்பர்.... மழை துளி எல்லாம் வைசரில் தேங்கி நின்னு.. ஒண்ணுமே தெரியாது.... நம்ம கவனம் எல்லாம் வண்டி ஓட்டரத்தை விட்டுட்டு விசரை தூக்கி பிடிச்சுக்கரதிலேயோ... அதை துடைச்சு விட்டுட்டே இருக்கரதிலேயோ தான் இருக்கணும்.

இது தவிர இலவச இணைப்பா.... வெயிட்டான ஹெல்மெட்டை தலையில் வெச்சு ஒழுங்கில்லாத ரோட்டில் வண்டி ஒட்டுறதால் வர்ற கழுத்து வலி, முதுகு தண்டு வலி இன்ன பிற வலிகள் இனாம்.  என்ஜாய்!

சரி... இப்படி இந்த ஹெல்மெட்டை போடணும்னு என்ன கட்டாயம்?  ஆமாம் கட்டாயம் தான்.

சாலை விபத்தில் நிறைய பேரு இறந்து போறாங்கன்னு ஒரு வருத்தமான ரிப்போர்ட்டு ஒவ்வொரு வருஷமும் வளர்ந்துகிட்டே போகுது.  அதை தடுக்கணும்னா என்ன செய்யணும்??

என்ன சொன்னீங்க.... ரோட்டை ஒழுங்கா போடறது, டிராபிக் ரூல்ஸை கட்டாயமா அமல்ப்படுத்தறது... எல்லா ரோட்டிலும் முறையான சைன் போர்டுகள் வெக்கறது.. வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்பா கடைபிடிக்க வெக்கறது..... இப்படி எதையெல்லாம் செஞ்சு விபத்தை குறைக்கணுமோ அதை எல்லாம் செய்யனும்னா சொல்றீங்க???

இல்லீங்க...நீங்க எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க... ரோடு அப்படி தான் இருக்கும்.. அதில் ஆக்கிரமிப்பு இருக்கும், ரோட்டிலே எல்லோரும் குறுக்க நெடுக்க தான் போவாங்க, ஸ்பீடு, ரேஷ் டிரைவிங் எல்லாம் இருக்கும், எந்த வண்டியும் ரோட்டில் ஒழுங்கா போகாது..... போலீசோ, அரசாங்கமோ  இதை எல்லாம் எதுவும் செய்யாது...நீங்க தான் ஹெல்மெட் போட்டு உங்களை காப்பாத்திக்கணும்!  இது தான் சட்டம்.

ஆக்சுவல்லா.. இந்த விஷயம் கோர்ட்டு படி ஏறினபோது, கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு ஸ்ட்ரைட்டா கோர்ட்டு உத்தரவு போட்டுச்சு.  அதாவது விபத்துக்களை குறைக்கறது பத்தி எதுவுமே யோசிக்காம, அதுக்கான ஏற்பாடுகளை செய்யாம, விபத்துக்களால் ஏற்படுகிற மரணத்தை குறைக்கறதுக்காக ஹெல்மெட்டை போட்டே ஆகணும்னு உத்தரவு போட்டுச்சு நீதிமன்றம்.  இப்படி கட்டாயப்படுத்த தேவையில்லைன்னு எவ்வளவோ வாதாடி பாத்தும் கோர்ட்டு அதை கேக்கலை.  தீர்ப்பு வேற நீதி வேறன்னு நமக்கு தெரியாதா?? நீதிமன்றங்கள் வெறும் தீர்ப்பை தான் தருகின்றன.. நீதியை அல்லவே?

சரி, அப்போ நாமளும் 'சட்டப்படியே' பேசுவோம்!

16-09-2005 அன்னைக்கு மத்திய அரசு, மத்திய மோட்டர் வாக சட்டம், 1989 இல் விதி 138 இல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, டூ வீலர் விக்கிற நிறுவனங்கள் ஒவ்வொரு டூ வீலரோடும் ஒரு ஹெல்மெட்டை (ISI தர சான்று பெற்று, BIS வகுத்திருக்கும் ஸ்பெசிபிகேஷன் படியான ஹெல்மெட்) இலவசமாக கொடுக்கணும்.  டூ வீலரை பதிவு செய்யும் பொது, ஹெல்மெட்டை கொடுத்ததுக்கான ரசீது இருந்தால் தான் வண்டியையே ரெஜிஸ்டர் செய்யணும்நு அந்த திருத்தம் சொல்லுது.  ஹெல்மெட் என்பது கட்டாய அக்ஸசரியாக கருதனும்னு அந்த சட்டம் சொல்லுது.

ஆனா எந்த டூ வீலர் கம்பெனியும் அதை கொடுக்கலை.  அப்படி எந்த நிறுவனமும் கொடுக்கலைங்கரதுக்காக யாரும் கோர்ட்டு படி ஏறலை. நீதிமன்றமும் அரசும் அதை பத்தி கவலையே படலை.  பாதிக்கப்பட்ட வண்டி ஓட்டிகளுக்கு எந்த நியாயமும் கிடைக்கலை.  அதுக்காக வாதாட யாருமே இல்லை.

இது நடந்து ரெண்டு வருஷம் கழிச்சு தமிழ் நாடு அரசும் ஒரு உத்தரவை  போட்டுது. கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு.  அது பல பல உத்தரவுகளை போல மற்றும் ஒரு உத்தரவா கெசட்டில் தூங்கிட்டு தான் இருந்துச்சு. யாரும் ஹெல்மெட்டை போடலை.

இப்படியான சூழலில் தான் கோர்ட்டுக்கு நம்ம டிராபிக் ராமசாமி போயி கட்டாய ஹெல்மெட்டுகான உத்தரவை சந்தோஷமா வங்கி வந்தாரு.  அவரை மக்கள் நல விரும்பின்னு கொண்டாடிச்சு சென்னை!  அதே நேரத்தில் மக்களை பாதிக்கிற, வாகன ஓட்டிகளை பாதிக்கிற முறையற்ற போக்குவரத்தையும், மத்திய அரசு சட்டத்தை நாலு வருஷமா மீறீட்டு இருக்கிற டூ வீலர் நிறுவனங்களையும், போக்குவரத்துக்கே லாயக்கிலாத சாலைகளையும், அவர் கவனத்தில் எடுத்துக்கலை.. அதை மக்களும் பெரிசா எடுத்துக்கலை!

இன்னைக்கு எந்த ரோட்டிலே வேணும்னாலும் டூ வீலர் காரங்களை விரட்டி விரட்டி பிடிக்கிற ஆக்டிவ்வான போலீஸ் நண்பர்களை நாம பார்க்கலாம்... அவங்க என்ன செய்வாங்க?? சட்டம் என்ன சொல்லுதோ அதை தானே அவங்க செய்யணும்?  (எல்லா சட்டத்தையும் அவங்க மதிக்கிராங்களான்னு எல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்க கூடாது)

சரி... இப்படி கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு சட்டம் போட்டாச்சு... விபத்துக்கள் குறைஞ்சுதா??  இல்லவே இல்லை! விபத்துக்களில் ஏற்படுற மரணங்கள் வேணும்னா குறைஞ்சிருக்கு!

அரசோட கவனம் விபத்தை குறைப்பதில் தான் இருந்திருக்கனுமே தவிர, விபத்து நடந்தால் ஏற்படுற மரணத்தை குறைப்பதில் இல்லை.  ஆனா அந்த கவனம் இன்னமும் வரவே இல்லை.   சாலைகளை அகலப்படுத்தறது, புதிய மேம்பாலங்களை கட்டுறது, சீரான போக்குவரத்துக்கு வசதி பண்ணி கொடுக்கறது, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது, போக்குவரத்து விதிகளை முறையா அமல்படுத்தறது, விதிமீறல்களுக்கு கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கறது... எல்லாத்துக்கும் மேலே சீரான தரமான முறையான ரோடுகளை போடறதுன்னு.. நிறைய விஷயங்களுக்கு அரசின் கவனம் வந்தாகணும்.  சென்னை ஒரு பேரு நகரம்னே சொல்லிக்க முடியாத அளவுக்கு இங்கத்த சாலைகள் இருக்குன்றதை அரசு உணர்ந்து அதை போக்க கவனம் செலுத்தணும்.

அந்த கவனம் வர்ற வரைக்கும், எல்லா கஷ்டத்துடனேயும் எல்லா இம்சைகளுடனேயும் எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கோங்க.... பத்திரமா!



Sunday, December 27, 2009

சாலை பாதுகாப்பு வார விழா!

சாலை பாதுகாப்பு வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது! வரும் ஜனவரி மாதத்துக்கான விழா ஏற்பாடுகள் இப்போதே களை கட்ட துவங்கி விட்டது.

அந்த ஒரு வாரம் மட்டும் (!) சாலை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, வர்ணங்கள் பூசுவது, அறிவிப்பு பலகைகள் வைப்பது, பிரச்சார இயக்கம் நடத்துவது, துண்டு அறிக்கைகள் கொடுப்பது, பேரணி நடத்துவது, விழிப்புணர்வு செய்திகள் கொடுப்பது என்று காவல் துறை பரபரப்பாக இருக்கும்.  அந்த வாரம் முடிந்தவுடன் அவ்வளவு தான்.  நாடு சுபிட்சமாக ஆகிவிடும் என்கிற நம்பிக்கையில் தங்கள் இயல்பான வேலையை செய்ய சென்று விடுகிறார்கள்.

அதிகரித்து வரும் விபத்துக்களுக்கான காரணிகள் என்ன??  நான்குவழிப்பாதையும் நடுவில் காங்கரீட் தடுப்பு சுவரும் அமைத்தும் கூட அதிகமான விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது??

நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை எதிர் எதிர் மோதல்களோ, திருப்பங்களிலான மோதல்களோ கிடையாது.

பெரும்பாலான வாகனங்கள், வண்டியின் முன்பும் பின்பும் அவசியமான விளக்குகளை இயங்க செய்வதில்லை.  திரும்பும்போதும், நிறுத்தும்போதும் சைகையாக காட்டப்படவேண்டிய பல விளக்குகள் இயக்கப்படுவதில்லை.  இதனால் தான் பின்னே வருகிற வண்டிகள் மோதுவது ஏற்படுகிறது. 

அப்படியானால் அந்த வண்டிகளுக்கான தர சான்றிதழ்களை தருகின்ற போக்குவரத்து துறை அதிகாரிகளோ, அந்த வாகனம் இயங்கும்போது சாலையில் அவற்றை கண்காணிக்கிற கடமையும் அதிகாரமும் உள்ள போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளோ எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்??

நகரங்களை பொறுத்தவரை முன் முகப்பு விளக்குகளின் பங்கு விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று!  கண்கூசும் முகப்பு விளக்குகள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன, எனினும் எல்லா வாகனங்களும் ஒளிர் விளக்குகளுடனேயே விரைகின்றன.  இந்த விளக்குகளால் சென்னை போன்ற நெரிசலான நகரங்களில் குறுக்கே வரும் இரு சக்கர வாகனங்களோ, சாவகாசமாக சாலையை கடக்கும் பாதசாரிகளோ கண்ணுக்கு தெரிவதே இல்லை.

போதா குறைக்கு சாலைகளின் தரம் வேறு சந்தி சிரிக்கிறது!  ஒரே ஒரு கிலோமீட்டருக்கேனும் ஒட்டோ, குழியோ, மேடோ, சதுப்போ இல்லாத ஒரு சாலையும் சென்னையில் இல்லை.  இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு நன்கு தெரியும், கைப்பிடி அதிராத ஒரு பயணமும் சென்னையில் சாத்தியம் இல்லை என்று. அந்த லட்சணத்தில் இருக்கிறது சென்னையின் சாலைகளின் தரம். புதிதாக கட்டப்பட்ட பாலங்களில் கூட சமமான பரப்பில் சமதள சாலைகள் இல்லை என்பதன் வருத்தம் இரு சக்கர வாகன ஓட்டிகளால் மட்டுமே உணரப்படுகிறது!

எல்லா சாலைகளிலும் போதுமான வெளிச்சமும், சாலைகளின் ஓரத்தில் சாலை விதி சங்கேத குறிகளும் கட்டாயமாக வைக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது விதி.  இப்படியான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக தமிழக அரசு தனியான ஒரு சட்டத்தையே போட்டு இருக்கிறது.  இதற்காக தனி நிதியத்தை ஏற்படுத்தி அந்த நிதியை கொண்டு 27 வகையான சாலை மேம்பாட்டு வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது சட்டம்.  எத்தனையோ சட்டங்களை போலவே இந்த சட்டமும் ஏட்டளவில் மட்டும் தான் இருக்கிறது.  சாலை குறிப்புக்களோ, தடுப்புக்களோ, முறையான போக்குவரத்துக்கான வசதிகளோ இது வரையும் செய்து கொடுக்கப்படவே இல்லை.  எனினும் செலவுகள் செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறது, எதற்காக என்றே தெரியாமல்.  பல
 பல சிக்னல்கள் சென்னை நகரில் வேலை செய்வதே இல்லை என்பது நகரா வாசிகள் அனைவரும் அறிந்த ரகசியம்.  அதை பராமரிப்பு செய்வதற்கான ஒப்பந்தமும் செலவும் செய்தும் இது வரை பயனில்லை.

சாலைகளில் வாகனங்களை ஓட்டுவோர் முறையான வழிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஒட்டாமல் இருப்பதும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம்.  சட்டென்று திரும்புவது, திடீரென்று நிறுத்துவது, போதிய எச்சரிக்கை விளக்குகளை உமிழ விடாதது போன்ற காரணிகளால் பிற வாகனங்கள் மோதலுக்கு உள்ளாகிறது.

நகரங்களில் வாகன சோதனை நடத்தும் காவலர்கள் ஆவணங்களை சரிபார்ப்பதோடு நின்று விடாமல், வாகனங்களின் / வாகன ஓட்டிகளின் இத்தகைய முறையற்ற தன்மைகளையும் தணிக்கை செய்வதும், அதற்கான கடுமையான நடவடிக்கைகளுமே ஒழுங்கான வாகன போக்குவரத்துக்கு வழி செய்யும்.

இரு சக்கர வாகன விபத்துக்களுக்கான காரணிகளை தவிர்க்க முனையாமல், குறைக்காமல், விபத்து ஏற்பட்டால் மரணம் சம்பவிக்காமல் இருப்பதற்கான ஹெல்மெட்டை கட்டாயம் செய்திருக்கிறது நீதிமன்றம்.  விபத்தை தவிர்ப்பது தான் முக்கியமே தவிர விபத்தில் மரணத்தை தவிர்ப்பது அல்ல!  இது எந்த செவியிலும் நுழையவேயில்லை. (ஹெல்மெட் பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுத  அவசியம் ஏற்பட்டு இருக்கிறது... எனவே, விரைவில்!)

எத்தனையோ சட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்ட காவல் துறை நண்பர்கள் போக்குவரத்து சட்டங்களையும் அலட்சியம் செய்வதால் தான் இத்தனை மரணங்கள் வாகன விபத்துக்களில் ஏற்ப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  எனவே சற்றேனும் மனிதாபிமானம் கொண்டு இந்த ஒரு சட்டத்தையாவது கடுமையாக அமல்படுத்த முனையவேண்டும்.

முன்னறிவிப்பு இல்லாமல் அவ்வப்போது வாகன தணிக்கையும், அதில் சிக்கும் தவறு செய்வோருக்கு தக்க நடவடிக்கையும் எடுப்பது தான், வாகன போக்குவரத்தில் ஒழுக்கத்தையும் சுமுகமான சூழலையும் கொண்டு வரும்.

மனிதம் காப்பார்களா மரியாதைக்குரிய காவலர்கள்??



Saturday, December 5, 2009

அரசு விரைவு பேருந்து!


ரசு விரைவு பேருந்து இப்போ கொஞ்சம் நல்லா இருக்கு.
முதலில் திருவள்ளுவர் போக்குவரத்து கழகம்னு தனியா வெளியூர் நீண்ட தூர பேருந்துகளுக்குன்னு ஒரு தனி போக்குவரத்து கழகமே தொடங்கப்பட்டது.. எம்.ஜி.ஆர் பீரியடில்
சென்னையில் ஒன்னு, நாகர்கோவிலில் ஒண்ணுன்னு ரெண்டு ஊரில் பேருந்து கட்டுமான பிரிவு தொடங்கி நல்லா தான் போயிட்டு இருந்தது...
இடையில் அந்த போக்குவரத்து கழகத்தை ரெண்டா பிரிக்கிறது, பழைய பேருந்துகளை இந்த பக்கம் தள்ளி விடுறதுன்னு அதகளம் எல்லாம் நடந்து, "ஐயையோ அரசு பேருந்தான்னு தெறிச்சு ஓடுற நிலைமைக்கு வந்து நின்னது!
நல்ல வேளையா, இப்போ அந்த போக்குவரத்து கழகத்துக்கு நல்ல காலம் பிறந்து.. விரைவு போக்குவரத்து கழகம்னு பேரை மாத்தி (அட..இதுக்கு நியூமராலாஜி எல்லாம் காரணம் இல்லை) புதுசு புதுசா, கலர் கலரா, சொகுசு சொகுசா பேருந்துகள் ஓடுது.
மேட்டர் என்னன்னா!
போனவாரம் சென்னையில் இருந்து கோவைக்கு ஏசி பஸ்ஸில் போக நேர்ந்தது....
எட்டே எட்டு மணி நேர பயணம்.... விழுப்புரம் சேலம் வழியா போகாம வேலூர் கிருஷ்ணகிரி மேட்டூர் வழியா போகுது....
நாலு வழி பாதைங்கரதால.....ஸ்பீடு கிளப்புது வண்டி!
உள்ளாரையும் நல்லா தான் இருக்கு! குளுகுளுன்னு ஏசி, தக தகன்னு கலர் டிவி, வீடியோ, புஷ் பேக்கு சீட்டு, களைப்பே தெரியாம இருக்க ஏர் சஸ்பென்ஷன் வசதி.... இத்தனைக்கும் குறைஞ்ச காசு!
கிட்டத்தட்ட எல்லா ஊருக்கும் சென்னையில் இருந்து குளிர் சாதனவசதி பேருந்து போகுதாம்!
ஒரே ஒரு குறை...
ஆன்லைன் ரிசர்வேஷன் வசதி மட்டும் இன்னும் வரலை... (இத்தனைக்கும் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னிலையில் இருக்காம்)
ஒவ்வொரு தடவையும் அங்கே போயி தான் ரிசர்வேஷன் செய்யணுமாம்!
அதை மட்டும் நிவர்த்தி பண்ணிட்டாங்கன்னா.... நெருக்கி அடிக்கிற ரயிலையும், கொள்ளை அடிக்கிற "பட்ஜெட்" (?) விமானங்களையும் ஒதுக்கி தள்ளிட்டு, ஓவர் நைட்டில் சொகுசா தமிழ் நாட்டில் எங்கே இருந்தும் எங்கேயும் போயிட்டு வர ரொம்ப வசதியான போக்குவரத்து கழகமா மாறிரும்....
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 

Sunday, December 6, 2009

சென்னையின் வோல்வோ ஏசி!




வெளியூர் பஸ்ஸை பத்தி எழுதிட்டு நம்ம எம்.டி.சியை பத்தி எழுதலைன்னா எப்படி??


ஒரே ரத்த கலரில் செக்க செவேர்ன்னு நகரத்தில் வலம் வந்திட்டு இருந்தது.. பல்லவன்! அந்த கலரை பார்த்தாலே எல்லோருக்கும் அலர்ஜி ஆகி, கலரு மாறிப்போச்சு... பச்சை கலரு ஜிங்கு சான்!


நகர பேருந்துகளில் ஒரே ஒரு கோடாவது சிகப்பில் இருககவெனுமனு ஒரு (முட்டாள்த்தனமான) சட்டம் இருந்தும் அதை மீறி முதல் முதலில் சிகப்பு வண்ணமே இல்லாம ஒரு நகர பேருந்து சென்னையில் வலம் வர தொடங்கிச்சு.
திரும்பவும் வந்தது சிகப்பு கலரு...... "ஜி" சீரிஸ் வண்டிகளில் (1993)... அப்புறம் என்ன என்னமோ மாற்றங்கள் எல்லாம் செஞ்சு, வண்டியை கொஞ்சம் கலர் புல்லா மாத்தணும்னு நெனைச்சு... பறவை, மரம், பட்டாம்பூச்சின்னு ஆர்ட் பிலிம் எல்லாம் போட்டு நிறைய வண்டிக ஓடிச்சு...
நல்லவேளை... சென்னையில் தனியார் பேருந்துகளை டவுன் பஸ்ஸா ஓட்ட தடை இருக்கறதால், எல்லாமே அரசு பஸ்சு தான்... குழப்பமே வரலை!
அப்புறம்... மாடல் பத்தி யோசிச்சாங்க! எத்தனை நாளைக்கு தான் நம்ம குரோம் பெட்டையில் இருக்கிற டையை வெச்சே வண்டி டிசைன் பண்றது?? பொள்ளாச்சியில் சேரன், திருச்சியில் தீரன், ஈரோடு ஜீவா ன்னு மூணு கழகங்களுக்கு ஆர்டர் கொடுத்து அங்கத்தை டிசைனில் கொஞ்சம் காலம் வண்டிகள் வர ஆரம்பிச்சுது....
பொதுவா லைலாண்டு வண்டிக தான்.... ஆனா ஒரே ஒரு தடவை "பரீத்சார்த்த முறையில் (?)" டாட்டா வண்டிகளை வாங்கி பாத்துட்டு விட்டுட்டாங்க!
இப்போ என்னடானா.... யந்திரன் சிவாஜி மாதிரி ஓவர் நைட்டில் அல்ட்ரா மாடர்ன் ஆயிருச்சு எம்.டி.சி.
ஒரு பக்கம் பிரகாஷ், டி.வி.எஸ், சக்தி, டி.வி.ஆர் ன்னு தனியார் கிட்டே கொடுத்து மாடல் மாடலா, அழகழகா வண்டிகளை வாங்கி ஓட்டுறாங்க... அதிலேயும் தானியங்கி கதவுகள், குஷன் சீட்டு, தொங்கும் கைப்பிடின்னு ஓரளவுக்கு மாடர்னா ஓடுது.....
திடீர்ன்னு பாத்தா பெங்களூர்லே மட்டும் தான் வோல்வோ விடுவாங்களா? நாங்க விடமாட்டோமான்னு இங்கேயும் கொண்டு வந்துட்டாங்கல்லே???
பஸ்சு என்னவோ ஷோக்கா தான் இருக்கு! பெங்களூர் மாதிரி செகப்பு கலரு அடிக்காம இருக்கறதுக்கே கோவில் கட்டி கும்பிடலாம்!
ஏசி, கொஞ்சம் சுமாரான ஸ்பீடு, எப்.எம்.ரேடியோ (கோயம்பத்தூரில் டவுன் பஸ்சில் ரெண்டு கலர் டிவி வெச்சு டிவிடியில் பிலிமே காட்டுறாங்க தெரியுமா?) எல்லாம் இருந்தும்.... சீட்டிங் சிஸ்டம் தான் என்னவோ சரியாவே இல்லை.... கொஞ்சம் தான் சீட்டுக்கள்... அதுவும் ஒழுங்கான வரிசையில் இல்லை...
வண்டியில் வசதிகள் எல்லாம் டிரைவருக்கு தான்.... பின்னாடி எஞ்சின் (காலுக்கு சூடு வராது) தானியங்கி கதவுகள்... வண்டிக்கு பின்னாலையும், சைடிலேயும் வர்ற வண்டிகளை கண்காணிக்க எல்லா பக்கமும் வெப் கேம் வெச்சு டிரைவர் முன்னாடி மானிட்டர் வெச்சிருக்காங்க! (ஹலோ.... 'அந்த' மானிட்டர் இல்லை.... அதை அடிச்சுட்டு வண்டி ஓட்ட கூடாதுன்னு சட்டமே இருக்கு)...
ஜி.பி.எஸ் சிஸ்டம் வெச்சிருக்காங்க... ரோடு மேப்பு காட்டுது.... இந்த வண்டி வரும் நேரத்தை வழியில் இருக்கிற பஸ் ஸ்டாப்பில் ஆட்டோமேட்டிக்கா டிஸ்பிளே கொடுக்குது.... மிதந்துகிட்டே போகுது.... அப்படி இப்படின்னு நல்லா தான் இருக்கு!
ஆனா பெங்களூரை கம்பேர் பண்ணினா ஸ்பீடு ரொம்ப குறைவு... (மெட்ராசில் ரோடு இல்லை... இதிலே வண்டி ஓட்டறதே ஒரு கலை... அதை பத்தி பிறவு தனியா புலம்பலாம்!)
சென்னையில் அதிகமா யாரு இதை யூஸ் பண்றாங்கன்னா... ஆட்டோக்கும், டாக்சிக்கும் கொடுக்குற காசுக்கு இது பரவாயில்லைன்னு நினைக்கிறவங்க, ஐ.டி. கம்பெனிக்காரங்க, ஏர்போர்ட், சென்டிரல் போறவங்க, இந்த மாதிரி குறிப்பிட்ட சில செக்ஷன் தான்....
ஆனா, என்னை கேட்டா சென்னைக்கு வோல்வோ வாங்க வேண்டிய அவசியமே இல்லை... அவ்வளவு காசு கொடுக்கறதுக்கு அதில் ஒண்ணுமே இல்லை.... லைலான்டிலேயே ஏசி பஸ்சு வருது.. குறைஞ்ச காசுக்கு நிறைஞ்ச திருப்தி!
ஏது எப்படியோ... வட சென்னை நாறி கிடந்தாலும், அடிப்படை ரோடு வசதி தேட கிடந்தாலும், நத்தை ரேஞ்சுக்கு போக்குவரத்து இருந்தாலும், வெளிநாடு மாதிரி எங்க ஊரிலே வண்டி ஓடுதுன்னு பெருமை பேசிக்கலாம்!
பின்னே... பெருமை பேசுறது தானே நம்ம பொழப்பே??

பஸ் டிரைவர்??????????




Thursday, December 17, 2009

SETC - அவசரப்பட்டுட்டேனோ??


போன வாரம் தான் நம்ம அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பத்தி ஆஹா ஓஹோன்னு எழுதி வெச்சேன்!

கொஞ்சம் அவசரப்பட்டுடேனொன்னு தோணுது இப்போ!

தொடர்ந்து ரெண்டு நாளா ரெண்டு விபத்து..

முந்தாநாளு ராத்திரி சென்னையில் இருந்து பெங்களூர் போன வண்டி வாணியம்பாடி கிட்டே ஒரு லாரி பின்னாடி இடிச்சு.. ஸ்டீரிங் பெண்டு ஆயி மேற்கொண்டு போக முடியாம நின்னு போச்சு... ஆளுங்களை எல்லாம் இறக்கி விட்டுட்டு வேற பஸ்ஸில் ஏத்தி விட்டுட்டு இருந்திருக்காங்க டிரைவரும் கண்டக்டரும்... அந்த நேரம் பாத்து பஸ்சுக்கு பினாடி ஒரு வேன் வந்து டமார்னு இடிச்சதிலே அந்த பஸ்சு நகர்ந்து பஸ்சு முன்னாடி நிட்டுட்டிருந்த பயணிகள் மேலே மோதி அஞ்சு பேறு காலி, அதே இடத்திலேயே!

இது இப்படின்னா...

நேத்து ராத்திரி சேலத்தில் இருந்து ராமேசுவரம் போன பஸ்சு அரவாக்குறிச்சி கிட்டே பிரேக் டவுன் ஆகி நின்னுபோச்சு... அதே மாதிரி ஆளுங்களை இறக்கி வேற பஸ்ஸில் ஏத்தி விட்டுட்டு இருக்கிற நேரம் பாத்து ஒரு லாரி அந்த கூட்டத்துக்குள்ளே திடீர்ந்து புகுந்து இடிச்சு தள்ளினதுலே அஞ்சு பேறு மரணம்!

ரெண்டு நாளில் பத்து பேரு...

முதல் சம்பவத்தில், டிரைவரோட அஜாக்கிரதையால லாரி மேல மோதி இருக்காரு..
ரெண்டாவது சம்பவத்தில் வண்டியே பிராப்ளம்...

இப்போ, விரைவு போக்குவரத்து கழகத்திலே மெயிண்டனன்ஸ்  மேல சந்தேகமா இருக்கு!

பஸ்சு வாங்கி கொடுக்கறது அரசாங்கத்தோட வேலை! அதை சரியா செஞ்சிட்டாங்க!

ஆனா அதை பராமரிக்கிறது அந்த அந்த கொட்ட பணிமனை அதிகாரிங்களோட கடமை இல்லையா?? என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க அவங்க??

டிரைவருங்களுக்கு போதுமான பயிற்சியோ, ஓய்வோ, இல்லாததும் ஒரு சின்ன குறை... தொடர்ச்சியா வேலை பாக்கவேண்டி இருக்கிறதால ஏற்படுற வெறுப்பு, சலிப்பு, இதோட சேர்ந்து ஒய்வின்மையால் இருக்கிற அசதி... இதெல்லாம் விபத்துக்கு சின்ன சின்ன காரணியாய் அமைஞ்சிடுது...

இனி மேலாவது, பேருந்துகளை ஒழுங்கா பராமரிக்கிறது, நீண்ட பயணத்துக்காக பணிமனையில் இருந்து வண்டியை எடுக்கும்போதே, முழுமையா பரிசோதிச்சு அதுக்கான கிளியரன்ஸ் கிடைச்சபின்னாடி எடுக்கறது, டிரைவருக்கு போதுமான ஒய்வு கொடுக்கறது, யோகா மாதரியான கவனம் கூட்டும் பயிற்சி

பஸ் பயணிகள் கவனத்திற்கு..4

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.பயணிகள் கவனத்திற்கு என்ற தொடரை பதிவிட்ட திரு.சதீஷ் சென்னை அவர்களுக்கு நன்றிங்க..

பயணிகள் கவனத்திற்கு – பாகம் 4

ற்கனவே தமிழக போக்குவரத்து கழகங்கள் குறித்த இந்த தொடரில் மூணு பாகம் முடிஞ்சு இது நாலாவது பாகம். இது வரை வந்த பாகங்கள் இங்கே ( Part-1 ; Part-2 ; Part-3 ) காணலாம்.


இவ்வளவு தூரம் தமிழக பஸ்களை பத்தி பேசிட்டு, மினி பஸ்களை பத்தி சொல்லலைன்னா எப்படி?

இந்த மினி பஸ் கான்சப்ட் ரொம்ப புதுமையானது. மக்கள் நலன் சார்ந்தது. ஆனா அந்த திட்டத்துக்கான உரிய முக்கியத்துவம் இதுவரைக்கும் கிடைக்கவேயில்லை. அரசு பஸ்கள் ஒரு குறிப்பிட்ட பகுதி / சாலை களில் தான் பயணிக்குது. அது எல்லா குக்கிராமங்களையும் இணைக்கறதில்லை. அதனால பல குக்கிராம மக்கள் சில கிலோமீட்டர் தூரம் வரைக்கும் நடந்து தான் பஸ்ரோட்டுக்கு வந்து பஸ் பிடிக்க முடிஞ்சுது. பெரிய பஸ்களை இயக்கமுடியாத சாலைகளும், சில கிராமங்களுக்கு முறையான சாலை வசதியே இல்லாத நிலைமையும் தான் போக்குவரத்து வசதி கிடைக்காம பல கிராமங்கள் தவிக்க காரணம்.

அப்படிபட்ட கிராமங்கள், புறநகர் பகுதிகளில் வசிக்கிற மக்களை அம்போன்னு விட முடியுமா என்ன? அதே சமயம், அந்த மாதிரி பகுதிக்கு ஒரு அரசு பஸ் இயக்குறதும் சாத்தியமற்றதா இருக்கு! என்ன செய்யலாம்னு யோசிச்சு, 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கலைஞரால் கொண்டுவரப்பட்டது தான் கிராமப்புற மினிபஸ் திட்டம்.

பஸ் வசதி இல்லாத பகுதிகளை, பஸ் வசதியுள்ள பகுதிகளுடன் இணைக்கிறது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அதனால் இந்த திட்டத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது. மொத்தமா 16 கி.மீ தூரத்துக்கு மட்டும் தான் இயக்கப்படணும். அதில் 4 கி.மீ தான் அரசு பஸ் செல்லும் வழித்தடத்தில் இயங்கணும்னு சில முக்கியமான கட்டுப்பாடுகள் இருந்தது.இந்த கட்டுப்பாடுகள் எதுக்குன்னா, மினி பஸ்களால் அரசு பஸ்களின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது. அதே சமயம், பஸ்வசதி இல்லாத பகுதிகளை பஸ்வசதியுள்ள பகுதிகளுடன் இணைக்கணும். இது தான் நோக்கம்!

உதாரணமா. திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிற அம்பாசமுத்திரத்தை எடுத்துக்கலாம். அம்பாசமுத்திரம் ஊருக்கு நிறைய பஸ்கள் இருக்கு.ஆனா அம்பாசமுத்திரத்துக்கு தெற்கே இருக்கிற சிவந்திப்பட்டின்ற கிராமத்துக்கு முறையான பஸ் வசதி இல்லை. அதனால் அந்த பகுதியை அம்பாசமுத்திரத்துடன் இணைக்கிறதுக்காக மினிபஸ் திட்டம் உதவிச்சு. இதே மாதிரி தான் தமிழகத்தில் பல பல கிராமங்களுக்கு இந்த் மினி பஸ் திட்டம் மூலமா நிறைய நன்மைகள் நடந்தது.

நடந்து பள்ளிக்கூடம் போனவங்களுக்கு வசதி. நடந்துபோகணுமேன்னு சோம்பல் பட்டுட்டு படிக்காம இருந்தவங்க கூட படிக்க போக ஆரம்பிச்சாங்க. வயசானவங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள்னு பல ஆயிரக்கணக்கானவங்க இந்த மினி பஸ் திட்டத்தால பயன் அடைஞ்சாங்க.

இந்த திட்டத்தில் அரசு ஈடுபடலை. அந்தந்தந்த பகுதி ஆட்களே மினிபஸ்களை இயக்கினாங்க. பல பகுதிகளில் ஊர் மக்களே எல்லாருமா கைக்காசு போட்டு தங்கள் கிராமத்துக்குன்னு பஸ் வசதி ஏற்படுத்திக்கிட்டாங்க. இன்னும் சில இடங்களில் மகளிர் / ஆடவர் சுய உதவி குழுக்கள் மூலமா பஸ்கள் இயக்கப்படுது. இது கிட்டத்தட்ட, கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மாத்தினதோட மட்டுமில்லாம பல வகையான முன்னேற்றங்களுக்கு மறைமுக காரணியாக இருந்தது.

இந்த திட்டத்தை, 2001-2006 காலத்தில் வந்த அதிமுக அரசு ரத்து பண்ணிச்சு. கிட்டத்தட்ட 3 வருஷ காலம், பஸ் வசதி இல்லாம மீண்டும் அத்தனை கிராம மக்களும் தண்டிக்கப்பட்டாங்க. எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சில வழக்குகள் னு மக்கள் களம் இறங்க ஆரம்பிச்சப்புறம், ரொம்ப லேட்டா, அரசு இறங்கி வந்துச்சு. மீண்டும் மினி பஸ்களை இயக்க அப்போதைய அதிமுக அரசு ஒத்துக்கிடுச்சு. ஆனா, அதுவரைக்கும் மினி பஸ்களுக்கு இருந்த நிறமான மஞ்சள் மற்றும் சிகப்பை நீக்கிட்டு முழுமையா பச்சைக்கலர் (அப்போ அந்த ஆட்சியில் ஜெ.வின் ராசியான நிறம் என சொல்லப்பட்ட நிறம்) தான் அடிக்கணும்னு ஒரு உத்தரவு வந்தது. எந்த கலரா இருந்தா என்ன, மக்களுக்கு நல்லது நடந்தா சரின்னு மீண்டும், மினி பஸ் இயங்க ஆரம்பிச்சுது.


அப்போ பல விதிகளில் தளர்வு கொண்டுவந்தாங்க. அந்த விதி மீறல்களால், நகரங்களிலும், அரசு பஸ்கள் இயங்கும் வழித்தடங்களிலும் முழுமையா மினிபஸ் இயங்க ஆரம்பிச்சது. இப்பவும் ஈரோடு, திருச்சி பகுதிகளில் பார்த்தீங்கன்னா, மினிபஸ் முழுமையா அரசு பஸ் வழித்தடத்திலேயே, அதுவும் நகர்ப்புறத்திலேயே இயங்கறதை பார்க்கலாம்.

இதில் என்ன விளைவுகள் வந்ததுன்னா, நகர்ப்புறத்தில் நிறைய காசு பார்க்க ஆரம்பிச்ச மினி பஸ்கள், கிராமப்புற சேவைகளை குறைச்சிகிட்டாங்க. மீண்டும் கிராம மக்கள் கற்காலத்துக்கு போக ஆரம்பிச்சாங்க. இன்னொரு பக்கம், நகர சாலைகளில் மினி பஸ்கள் இயங்கறதால் அரசு பஸ்கள் நஷ்டமடைய ஆரம்பிச்சது. சூப்பரான வண்டிகள், டிஜிட்டல் ஸ்டீரியோ, எங்கே வேணும்னாலும் நிறுத்தி ஏறி இறங்கற வசதின்னு நகர மக்கள் மினி பஸ்சை விரும்ப ஆரம்பிச்சாங்க.

ஆனா, எந்த காரணத்துக்காக, எந்த மக்களுக்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ, அவங்க மீண்டும், பல பகுதிகளில் நடந்து தான் மெயின்ரோட்டுக்கு வந்து பஸ் பிடிக்கணும்னு ஆகிப்போச்சு.

விடுங்க. அது அவங்க தலையெழுத்து. நாம நம்ம பயணங்களை பார்ப்போம்.

நான் முதல் முதலில் பயணிச்ச நெடுந்தூர பஸ் பயணம், திருவனந்தபுரம்-சென்னை. ம்த்தியானம் 12 மணிக்கு திருவனந்தபுரத்தில் எடுத்து நாகர்கோவிலுக்கு சாயங்காலம் 3 மணிக்கு வந்தது. அங்கெ இருந்து 4 மணிக்கு எடுத்து திருநெல்வேலிக்கு 6.30க்கு வந்தது. மதுரை வரும்போது மணி 12. மறுநாள் காலையில் 9 மணிக்கு தான் சென்னைக்கு வந்தது. நொந்து நூடுல்சாகி, அந்து அவலாகி, வெந்து வெறுப்பாகி பஸ்ல இருந்து வெளியே வந்தேன். இத்தனைக்கும் அது தமிழக அரசு ‘விரைவு’ போக்குவரத்துக்கழகம்.

அரசு பஸ்களிலேயே எனக்கு பிடிச்ச பஸ் சேரன் தான். சுத்தமா வெச்சிருப்பாங்க, அழகான பஸ்கள். ஆனா இப்போ படு கேவலமா இருக்கு! தந்தை பெரியார் போக்குவரத்து கழக பஸ்கள் கொஞ்சம் வித்தியாசமானது. எல்லாரும் ஹைடிராலிக் சஸ்பென்ஷன், ஏர் சஸ்பென்ஷன்னு வெச்சிருக்காங்க. ஆனா பெரியாரில் மட்டும் விவில்லர் சஸ்பென்ஷன். பஸ் நல்ல நீளம். ஆனாலும் உறுதியான சஸ்பென்ஷன். வட தமிழகத்தில் பெரியாரை அடிச்சிக்க இன்னொரு பஸ் இல்லை.

பார்த்தாலே கொஞ்சம் கேவலமான டிசைனா எனக்கு பட்டது அன்னை சத்தியாவும், கட்டபொம்மனும் தான். நேசமணி உறுதியான பஸ். தமிழகத்திலேயே மிக அதி விரைவான பஸ் நேசமணின்னு சொல்லுவாங்க. நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரூட்டில் கேரளா பஸ்சுக்கு நிகரா ஸ்பீடா போவாங்களாம். கேள்விப்பட்டிருக்கேன்.

தீரன் சின்னமலை பஸ்சின் சென்னை-கரூர் பஸ் ரொம்ப அழகு. அது ஒரு டீலக்ஸ் பஸ். சென்னையில் இருந்து கரூர் போகும்போது, திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டு கிட்ட ஒரு யூ டர்ன் ஸ்பீடா அடிச்சு உறையூர் ரோட்டில் நிக்கும் பாருங்க. செம்மெ. அந்த திரில்லுக்காகவே அதில் பயணிக்கலாம். தீரன் சின்னமலை பஸ் அழகான டிசைன், பெயிண்டிங் எல்லாம் சூப்பரா இருக்கும்.

எல்லா போக்குவரத்து கழக பஸ்களுக்கும் இங்கிலீஷில் பெயர் சுருக்கம் TC ன்னு தான் முடியும் (PTC, TTC, DCTC, KTC ன்னு) ஆனா சேரன், சோழன் னு ரெண்டு C, பல்லவன் பாண்டியன்னு ரெண்டு P இருந்ததால், அந்த ரெண்டு பஸ்களுக்கு மட்டும் CTC (Cheran), CRC (Cholan) & PTC (Pallavan), PRC (Pandiyan) ன்னு வெச்சிருந்தாங்க. எனக்கு ரொம்ப நாளா இந்த CRC, PRC க்கு அர்த்தம் தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அது ஒரு அசட்டு காலம்!

நான் இது வரைக்கும் பயணிச்ச பஸ்களில் விபத்தில் சிக்கினதில்லை. ஆனா விபத்துக்களை நேரடியா பார்த்திருக்கேன். எனக்கு முன்னால் போன பஸ் விபத்துக்குள்ளாகி பயணிகள் அலறியடிச்ச சத்தம் இப்பவும் ஞாபகத்தில் இருக்கு.

வாழ்க்கையில நாம யாரை நம்புறோமோ இல்லையோ, நல்லா தெரிஞ்ச நண்பன், கூடவே இருக்கிற அப்பா அம்மா இவங்க மேலே கூட இல்லாத நம்பிக்கையை நாம பஸ் டிரைவர் மேலே வெச்சிருக்கோம். நாளைக்கு காலையில் நம்மளை உருப்படியா நல்லபடியா இறக்கிவிட்டுடுவாருன்ற நம்பிக்கையில் தான் பல பயணிகள் நிம்மதியா தூங்கிட்டு வர்றாங்க. அப்படி ஒரு நம்பிக்கையான மக்கள் இருக்காங்கன்ற அந்த பொறுப்புணர்வும், கடமையும் தான் நம்ம டிரைவர்களை மரியாதைக்குரியவங்களா வெச்சிருக்கு. அவங்க ஒரே ஒரு செகண்டு அசந்தாலும் கூட 40 பேருக்கு உத்திரவாதம் இல்லை. மத்த மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பஸ் விபத்து குறைவுன்றது எவ்வளவு சந்தோஷமான விஷயம்?
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இது மூன்றாம் பாகம்

Wednesday, July 4, 2012

பயணிகள் கவனத்திற்கு – பாகம் 3

மிழக போக்குவரத்து கழகங்களை பத்தின இந்த தொடரின் Part-1 & Part-2 ஆகியவற்றை தொடர்ந்து இது .மூன்றாம் பதிவு


தமிழகத்தில் திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் தான் நீண்ட தூர பஸ்களை இயக்கிட்டு இருக்காங்க. அதில் இருந்து வெளிமாநில பஸ்களை மட்டும் தனியா பிரிச்சு எடுத்து 1991-96 அதிமுக ஆட்சிகாலத்தில் ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் ஆரம்பிச்சாங்க. அதுக்கு பிறகு வந்த திமுக ஆட்சி ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் என்கிற பெயரை மாற்றி ராஜீவ் காந்தி போக்குவரத்து கழகம்னு ஆக்கினாங்க. போக்குவரத்து கழங்களுக்கு இருந்த சிறப்பு பெயர்கள் எல்லாம் நீக்கப்பட்டபோது, திருவள்ளுவர், ராஜீவ்காந்திங்கற பெயரை தூக்கிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம்னு பேரு வெச்சாங்க. (SETC – State Express Transport Corporation).அதோட, தனித்தனியா இயங்கிட்டு இருந்த இந்த இரண்டு நிர்வாகத்தையும் இணைச்சு, ஒரே நிர்வாகமா ஆக்கிட்டாங்க.


இந்த பஸ்களுக்கு ரூட் நம்பர் வெக்கிறதில் உள்ள லாஜிக் அலாதியானது. பஸ்கள் இயங்கும் பகுதியை தமிழகத்தில் 5 மண்டலமா பிரிச்சிருக்காங்க. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு & மத்திய தமிழகம். பஸ் ரூட்டுகளுக்கு 3 டிஜிட் நம்பர் கொடுத்திருக்காங்க. அதில் முதல் இலக்கம், எந்த வழித்தடத்தில் இயங்குதுன்னு சொல்லும். மத்த 2 டிஜிட் தான் ரூட் நம்பர். உதாரணங்கள் சொன்னா ஈசியா புரியும்.

வடக்கு-மத்திய தமிழகத்துக்கு இயக்கப்படும் பஸ்கள் 1 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-திருச்சி)

வடக்கு-தெற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 2 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-மார்த்தாண்டம்)

வடக்கு-கிழக்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 3 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-வேளாங்கண்ணி)

வடக்கு-மேற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 4 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-கோவை)

தெற்கு-கிழக்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 5 எனும் எண்ணில் துவங்கும் (உம். கன்னியாகுமரி-நாகப்பட்டினம்)

தெற்கு-மேற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 6 எனும் எண்ணில் துவங்கும் (உம்: நெல்லை-கோவை)

இது தவிர வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள்:

7 என துவங்குபவை கேரள மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன

8 என துவங்குபவை கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன

9 என துவங்குபவை ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன.

1980களில், திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் ஒரு அருமையான டைம் டேபிளை வெளியிட்டிருந்தது. அதில் தமிழகத்தின் எல்லா ஊரிலிருந்தும் பஸ் டைமிங், கனெக்ஷன் பஸ்கள், வழித்தடம், எங்கெல்லாம் நிக்கும்னு எல்லா விவரங்களும் ஒரு புத்தகமா வெளியிட்டாங்க. அடிக்கடி பயணம் செய்யுறவங்களுக்கு (சேல்ஸ் / மார்கெட்டிங் / சைட் எஞ்சினியர்கள்) ரொம்ப உதவிகரமா இருந்தது. இப்போ அப்படி எந்த டைம்டேபிளும் இல்லை. போக்குவரத்து கழக வெப்சைட்டிலும் முழுமையான விவரங்கள் இல்லை. பஸ் ஸ்டாண்டுகளிலும் விவரங்கள் கிடையாது.

முன்னெல்லாம் ஒவ்வொரு ஊரிலும், மத்திய பேருந்து நிலையம்னு ஒண்ணு இருந்தாலும், திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்துக்குன்னு ஒரு தனி பஸ் ஸ்டாண்டும் இருந்தது. இப்போ எல்லாமே ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களா ஆயிருச்சு.

விரைவு போக்குவரத்து கழகத்தில் மினி பஸ்கள் கிடையாது. ஊட்டிக்கு கூட அஷோக் லேலண்டு வைகிங் பஸ் தான் ஓட்டுறாங்க. அவ்வளவு நீளமான பஸ்ஸை எப்படி மலை ஏத்துவாங்கன்னு எனக்கு ரொம்ப நாள் ஆச்சரியமா இருந்தது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் தான் எல்லா தாலுக்காவுக்கும் பஸ்கள் இயக்குது என்பதால் அதில் தான் நான் தமிழகம் முழுவதும் சுத்தினேன். ஆனாலும் வட்டார போக்குவரத்து கழக பஸ்களில் அவசர காலங்களில் பயணிப்பேன். விரைவு போக்குவரத்து கழகம், எல்லா முக்கிய பஸ் ஸ்டாண்டிலும் நின்னு நின்னு போகும். காரணம் எல்லா டைம் ஆபீசிலும் வண்டி எண்டிரி செஞ்சு ஆகணும். அதுவுமில்லாம வேகக்கட்டுப்பாடு கருவி இருக்கிறதால மெல்லமா தான் போகும். வட்டார போக்குவரத்து கழகத்துக்கு அந்த பிரச்சனை இல்லை. பாய்ண்ட் டு பாயிண்ட் எப்படி வேணும்னாலும் போயிக்கிடலாம். வேகம் அவங்க இஷ்டப்படி.

சென்னையில் இருந்து கோவைக்கு திருவள்ளுவரில் 460ன்னு ஒரு ரூட் பஸ் முன்னெல்லாம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், சேலம், ஈரோடு பஸ் ஸ்டாண்டுகளில் நின்னு டைம் எண்ட்ரி பண்ணிட்டு போகும், ஆனா சேரன் போக்குவரத்து கழக பஸ் எங்கேயும் நிக்காது. ஏன்னா, அவங்களுக்கு இங்கெல்லாம் டைம் ஆபீஸ் இல்லை. சென்னை-பெங்களூர் 4 வழிப்பாதை அமைச்சப்புறம் அந்த 460 பஸ் ரூட்டு மாறி, வேலூர், தருமபுரி வழியா போக ஆரம்பிச்சுது.

சென்னை – கோவை 510 கி.மீ. சேரன் பஸ்ஸில் 2 டிரைவர்கள் இருப்பாங்க. ஆளுக்கு 170 கி.மீ (3.30 மணி நேரம்) பிரிச்சுக்குவாங்க. சென்னை-விழுப்புரம் 170 கி.மீ; விழுப்புரம்-சேலம் 170 கி.மீ; சேலம்-கோவை 170 கி.மீன்னு 11 மணிநேரத்தில் பயணிக்கணும். ஆனால் சென்னை-விழுப்புரம் 4 மணிநேரம் ஆயிரும். டிராஃபிக்! விழுப்புரம் சேலம் 3 மணிநேரம்; சேலம்-கோவை 2.30 மணிநேரம்னு சீக்கிரமாவே கோவைக்கு போயிரும் சேரன். இப்போ தனியார் வோல்வோ பஸ்கள் 7 மணிநேரத்தில் கோவைக்கு போவுது!

இந்த மாதிரி நீண்ட தூர பயணங்களில் பெரிய பிரச்சனையே உணவு தான். கண்ட கண்ட இடங்களில் இருக்கும் தரமற்ற ஹோட்டல்களில் வண்டியை நிறுத்தி சாப்பிட சொல்லுவாங்க. டிரைவருக்கும் கண்டக்டருக்கும் ஃபிரீ. ஆனா நம்மகிட்டே மொத்தமா கறந்துருவாங்க. பொதுவா, சென்னையில் இருந்து சாயந்தரம் கிளம்புற பஸ்கள் எல்லாத்துக்குமே விக்கிரவாண்டி தான் டின்னர் பாய்ண்ட். பசிக்கிற நேரத்தில் எந்த ஊரு வருதுன்னு பார்த்து அங்கே நிறுத்துவாங்க. தரமில்லாத உணவுக்கு எக்கச்சக்கமா காசு அழுது அரை மனசா பயணிச்ச காலங்கள் நிறைய.

பயணிகளின் கஷ்டத்தை அறிஞ்ச தமிழக அரசு, போக்குவரத்து கழகம் மூலமாவே ஒரு நல்ல தரமான மோட்டல் (வழியோர உணவகம்) கட்ட தீர்மானிச்சு, செங்கல்பட்டு கடந்ததும் மாமண்டூரில பிரமாண்டமான உணவகத்தை அமைச்சாங்க. எல்லா அரசு பேருந்துகளும் அங்கே தான் நிறுத்தி சாப்பிடணும்னு உத்தரவே போட்டுச்சு அரசு. ஆனா அந்த திட்டம் வெற்றி பெறலை. இப்போ அந்த மோட்டல் வீணா தான் கிடக்குது. அது தோற்றதுக்கு காரணம் இடம். இந்த மோட்டலை விழுப்புரத்தில் கட்டி இருந்தா உபயோகமா இருந்திருக்கும். செங்கல்பட்டில் கட்டினதால், பஸ் புறப்பட்ட 1.30 மணிநேரத்திலேயே உணவு பிரேக் என்பது நடைமுறையில் சரியா வரலை. அதனால் பல பஸ்கள் அங்கே நிறுத்தலை.

இப்பவும், விழுப்புரம், திருச்சி, கோவில்பட்டி, ஈரோடு, வாணியம்பாடி பகுதிகளில் அரசே தரமான மோட்டல்களை அமைச்சிதுன்னா ரொம்ப உதவியாக தான் இருக்கும்.

வெளிமாநிலத்துக்கு நம்ம பஸ்கள் இயங்குதுங்கறது உங்களுக்கு தெரியும். ஆனா இதில் என்னென்ன முரண்பாடுகள், உரிமைபோராட்டங்கள் எல்லாம் நடக்குது தெரியுமா?


கர்நாடக அரசு பஸ்கள், தமிழகத்தில் எல்லா பகுதிகளுக்கும் வந்து போயிட்டு இருக்கு. கொடைக்கானலுக்கு கூட வருது. தமிழகத்தை ஊடுருவி. தென் தமிழகம் வரைக்கும் சர்வீஸ் விடிருக்காங்க. ஆனா, நம்ம தமிழக பஸ்கள் தெற்கு கர்நாடகம் வரைக்கும் தான் செல்ல அனுமதி. ஷிமோகா, ஹூப்ளி, தவணகிரி, பெல்லலரி மாதிரி மத்திய / வடக்கு கர்நாடகத்துக்கு தமிழக பேருந்துகளுக்கு அனுமதி இல்லை.


அதே மாதிரி தான் ஆந்திராவும். ஆந்திரா பஸ்கள் தமிழ் நாட்டில் கோவை வரைக்கும் கூட வருது. ஆனா நமக்கு தெற்கு ஆந்திரா தவிர மேலே செல்ல அனுமதி இல்லை. எல்லைபுற நகரங்களான திருப்பதி, நெல்லூர் பகுதிகளுக்கு தான் தமிழக பஸ்கள் செல்ல அனுமதி. சென்னை – ஹைதிராபாத் ரூட்டுக்கு செம டிமாண்ட் இருக்கு. ஆனால் அந்த ரூட்டில் ஆந்திரா பஸ்களூம் தனியார் பஸ்களும் தான் இயங்குது, தமிழக பஸ்களுக்கு இன்னமும் அனுமதி இல்லை.

நாம மட்டும் என்ன லேசுப்பட்டவங்களா என்ன? கேரளாவின் எல்லா பகுதிகளுக்கும் தமிழக பஸ் சேவை இருக்கு. ஆனா, கேரள அரசு பஸ்களுக்கு வடக்கு தமிழகத்தில் பஸ் இயக்க அனுமதி இல்லை. சேலத்துக்கு வடகிழக்கே கேரள பஸ்கள் வருவதற்கு நாம் இன்னமும் அனுமதிக்கலை.

சென்னை-திருவனந்தபுரம் ரூட்டில் ஓடும் எல்லாமே தமிழக அரசு பஸ்களும் தனியார் பஸ்களும் தான். ஒரு சர்வீஸ் கூட கேரளாவுக்கு கொடுக்கலை. அதுக்கு பதிலா, பாலக்காடு-கோவை, திருவனந்தபுரம்-நாகர்கோவில் ரூட்டுகளில் நாம கம்மியா இயக்கி அவங்களுக்கு அதிக உரிமம் கொடுத்திருக்கோம்.


இதை விட இன்னொரு ஆச்சரியமான விஷயம் இருக்கு. கேரள மாநில பகுதியில் புதுவை மாநிலத்துக்கு சொந்தமான மாஹி என்கிற ஊர் இருக்கு. அங்கே இருந்து புதுவைக்கு கேரளா அரசு பஸ் இயக்கணும்னு அவங்க கோரிக்கை கொடுத்தும் நாம் அனுமதிக்கலை. கேரளா பஸ் மட்டும் அல்ல, அந்த ரூட்டில் புதுவை பஸ்சுக்கும் அனுமதி இல்லை. அதை தமிழக பஸ் மட்டுமே மொத்தமா எடுத்து புதுவை-கோழிக்கோடு ரூட்டில் நாமளே ஒரு திராபையான பஸ் இயக்கிட்டு இருக்கோம்! கேரளா அரசும், புதுவை அரசும் வோல்வோ சொகுசு பஸ் இயக்குறாங்கன்றது தெரிஞ்ச விஷயம்.

எதனால இந்த ஈகோன்னு எனக்கு தெரியலை. சென்னைக்கு கேரளா பஸ்கள் வர அனுமதி இல்லை. ஹைதிராபாதுக்கும் ஹூப்ளிக்கும் தமிழக பஸ்கள் வர அனுமதி இல்லை. சுருக்கமா பார்த்தா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் எல்லையோர பகுதிகளுக்கு மட்டும் தான் தமிழக பஸ்களுக்கு அனுமதி. கேரளாவில் முழு மாநிலத்திலும் அனுமதி. அதே நேரம் கேரள பஸ்களுக்கு தமிழகத்தில் எல்லைபகுதிகளில் மட்டும் தான் அனுமதி. ஆனால் கர்நாடக, ஆந்திர பஸ்களுக்கு தமிழகம் முழுவதும் அனுமதி. என்னமோ இதில் லாஜிக் இடிக்குதுல்ல?

அதை யோசிச்சிட்டு இருங்க.. அடுத்த பாகத்தில் விரிவா பேசுவோம்!