வியாழன், 10 ஜூலை, 2014

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இது மூன்றாம் பாகம்

Wednesday, July 4, 2012

பயணிகள் கவனத்திற்கு – பாகம் 3

மிழக போக்குவரத்து கழகங்களை பத்தின இந்த தொடரின் Part-1 & Part-2 ஆகியவற்றை தொடர்ந்து இது .மூன்றாம் பதிவு


தமிழகத்தில் திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் தான் நீண்ட தூர பஸ்களை இயக்கிட்டு இருக்காங்க. அதில் இருந்து வெளிமாநில பஸ்களை மட்டும் தனியா பிரிச்சு எடுத்து 1991-96 அதிமுக ஆட்சிகாலத்தில் ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் ஆரம்பிச்சாங்க. அதுக்கு பிறகு வந்த திமுக ஆட்சி ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் என்கிற பெயரை மாற்றி ராஜீவ் காந்தி போக்குவரத்து கழகம்னு ஆக்கினாங்க. போக்குவரத்து கழங்களுக்கு இருந்த சிறப்பு பெயர்கள் எல்லாம் நீக்கப்பட்டபோது, திருவள்ளுவர், ராஜீவ்காந்திங்கற பெயரை தூக்கிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம்னு பேரு வெச்சாங்க. (SETC – State Express Transport Corporation).அதோட, தனித்தனியா இயங்கிட்டு இருந்த இந்த இரண்டு நிர்வாகத்தையும் இணைச்சு, ஒரே நிர்வாகமா ஆக்கிட்டாங்க.


இந்த பஸ்களுக்கு ரூட் நம்பர் வெக்கிறதில் உள்ள லாஜிக் அலாதியானது. பஸ்கள் இயங்கும் பகுதியை தமிழகத்தில் 5 மண்டலமா பிரிச்சிருக்காங்க. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு & மத்திய தமிழகம். பஸ் ரூட்டுகளுக்கு 3 டிஜிட் நம்பர் கொடுத்திருக்காங்க. அதில் முதல் இலக்கம், எந்த வழித்தடத்தில் இயங்குதுன்னு சொல்லும். மத்த 2 டிஜிட் தான் ரூட் நம்பர். உதாரணங்கள் சொன்னா ஈசியா புரியும்.

வடக்கு-மத்திய தமிழகத்துக்கு இயக்கப்படும் பஸ்கள் 1 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-திருச்சி)

வடக்கு-தெற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 2 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-மார்த்தாண்டம்)

வடக்கு-கிழக்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 3 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-வேளாங்கண்ணி)

வடக்கு-மேற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 4 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-கோவை)

தெற்கு-கிழக்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 5 எனும் எண்ணில் துவங்கும் (உம். கன்னியாகுமரி-நாகப்பட்டினம்)

தெற்கு-மேற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 6 எனும் எண்ணில் துவங்கும் (உம்: நெல்லை-கோவை)

இது தவிர வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள்:

7 என துவங்குபவை கேரள மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன

8 என துவங்குபவை கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன

9 என துவங்குபவை ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன.

1980களில், திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் ஒரு அருமையான டைம் டேபிளை வெளியிட்டிருந்தது. அதில் தமிழகத்தின் எல்லா ஊரிலிருந்தும் பஸ் டைமிங், கனெக்ஷன் பஸ்கள், வழித்தடம், எங்கெல்லாம் நிக்கும்னு எல்லா விவரங்களும் ஒரு புத்தகமா வெளியிட்டாங்க. அடிக்கடி பயணம் செய்யுறவங்களுக்கு (சேல்ஸ் / மார்கெட்டிங் / சைட் எஞ்சினியர்கள்) ரொம்ப உதவிகரமா இருந்தது. இப்போ அப்படி எந்த டைம்டேபிளும் இல்லை. போக்குவரத்து கழக வெப்சைட்டிலும் முழுமையான விவரங்கள் இல்லை. பஸ் ஸ்டாண்டுகளிலும் விவரங்கள் கிடையாது.

முன்னெல்லாம் ஒவ்வொரு ஊரிலும், மத்திய பேருந்து நிலையம்னு ஒண்ணு இருந்தாலும், திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்துக்குன்னு ஒரு தனி பஸ் ஸ்டாண்டும் இருந்தது. இப்போ எல்லாமே ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களா ஆயிருச்சு.

விரைவு போக்குவரத்து கழகத்தில் மினி பஸ்கள் கிடையாது. ஊட்டிக்கு கூட அஷோக் லேலண்டு வைகிங் பஸ் தான் ஓட்டுறாங்க. அவ்வளவு நீளமான பஸ்ஸை எப்படி மலை ஏத்துவாங்கன்னு எனக்கு ரொம்ப நாள் ஆச்சரியமா இருந்தது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் தான் எல்லா தாலுக்காவுக்கும் பஸ்கள் இயக்குது என்பதால் அதில் தான் நான் தமிழகம் முழுவதும் சுத்தினேன். ஆனாலும் வட்டார போக்குவரத்து கழக பஸ்களில் அவசர காலங்களில் பயணிப்பேன். விரைவு போக்குவரத்து கழகம், எல்லா முக்கிய பஸ் ஸ்டாண்டிலும் நின்னு நின்னு போகும். காரணம் எல்லா டைம் ஆபீசிலும் வண்டி எண்டிரி செஞ்சு ஆகணும். அதுவுமில்லாம வேகக்கட்டுப்பாடு கருவி இருக்கிறதால மெல்லமா தான் போகும். வட்டார போக்குவரத்து கழகத்துக்கு அந்த பிரச்சனை இல்லை. பாய்ண்ட் டு பாயிண்ட் எப்படி வேணும்னாலும் போயிக்கிடலாம். வேகம் அவங்க இஷ்டப்படி.

சென்னையில் இருந்து கோவைக்கு திருவள்ளுவரில் 460ன்னு ஒரு ரூட் பஸ் முன்னெல்லாம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், சேலம், ஈரோடு பஸ் ஸ்டாண்டுகளில் நின்னு டைம் எண்ட்ரி பண்ணிட்டு போகும், ஆனா சேரன் போக்குவரத்து கழக பஸ் எங்கேயும் நிக்காது. ஏன்னா, அவங்களுக்கு இங்கெல்லாம் டைம் ஆபீஸ் இல்லை. சென்னை-பெங்களூர் 4 வழிப்பாதை அமைச்சப்புறம் அந்த 460 பஸ் ரூட்டு மாறி, வேலூர், தருமபுரி வழியா போக ஆரம்பிச்சுது.

சென்னை – கோவை 510 கி.மீ. சேரன் பஸ்ஸில் 2 டிரைவர்கள் இருப்பாங்க. ஆளுக்கு 170 கி.மீ (3.30 மணி நேரம்) பிரிச்சுக்குவாங்க. சென்னை-விழுப்புரம் 170 கி.மீ; விழுப்புரம்-சேலம் 170 கி.மீ; சேலம்-கோவை 170 கி.மீன்னு 11 மணிநேரத்தில் பயணிக்கணும். ஆனால் சென்னை-விழுப்புரம் 4 மணிநேரம் ஆயிரும். டிராஃபிக்! விழுப்புரம் சேலம் 3 மணிநேரம்; சேலம்-கோவை 2.30 மணிநேரம்னு சீக்கிரமாவே கோவைக்கு போயிரும் சேரன். இப்போ தனியார் வோல்வோ பஸ்கள் 7 மணிநேரத்தில் கோவைக்கு போவுது!

இந்த மாதிரி நீண்ட தூர பயணங்களில் பெரிய பிரச்சனையே உணவு தான். கண்ட கண்ட இடங்களில் இருக்கும் தரமற்ற ஹோட்டல்களில் வண்டியை நிறுத்தி சாப்பிட சொல்லுவாங்க. டிரைவருக்கும் கண்டக்டருக்கும் ஃபிரீ. ஆனா நம்மகிட்டே மொத்தமா கறந்துருவாங்க. பொதுவா, சென்னையில் இருந்து சாயந்தரம் கிளம்புற பஸ்கள் எல்லாத்துக்குமே விக்கிரவாண்டி தான் டின்னர் பாய்ண்ட். பசிக்கிற நேரத்தில் எந்த ஊரு வருதுன்னு பார்த்து அங்கே நிறுத்துவாங்க. தரமில்லாத உணவுக்கு எக்கச்சக்கமா காசு அழுது அரை மனசா பயணிச்ச காலங்கள் நிறைய.

பயணிகளின் கஷ்டத்தை அறிஞ்ச தமிழக அரசு, போக்குவரத்து கழகம் மூலமாவே ஒரு நல்ல தரமான மோட்டல் (வழியோர உணவகம்) கட்ட தீர்மானிச்சு, செங்கல்பட்டு கடந்ததும் மாமண்டூரில பிரமாண்டமான உணவகத்தை அமைச்சாங்க. எல்லா அரசு பேருந்துகளும் அங்கே தான் நிறுத்தி சாப்பிடணும்னு உத்தரவே போட்டுச்சு அரசு. ஆனா அந்த திட்டம் வெற்றி பெறலை. இப்போ அந்த மோட்டல் வீணா தான் கிடக்குது. அது தோற்றதுக்கு காரணம் இடம். இந்த மோட்டலை விழுப்புரத்தில் கட்டி இருந்தா உபயோகமா இருந்திருக்கும். செங்கல்பட்டில் கட்டினதால், பஸ் புறப்பட்ட 1.30 மணிநேரத்திலேயே உணவு பிரேக் என்பது நடைமுறையில் சரியா வரலை. அதனால் பல பஸ்கள் அங்கே நிறுத்தலை.

இப்பவும், விழுப்புரம், திருச்சி, கோவில்பட்டி, ஈரோடு, வாணியம்பாடி பகுதிகளில் அரசே தரமான மோட்டல்களை அமைச்சிதுன்னா ரொம்ப உதவியாக தான் இருக்கும்.

வெளிமாநிலத்துக்கு நம்ம பஸ்கள் இயங்குதுங்கறது உங்களுக்கு தெரியும். ஆனா இதில் என்னென்ன முரண்பாடுகள், உரிமைபோராட்டங்கள் எல்லாம் நடக்குது தெரியுமா?


கர்நாடக அரசு பஸ்கள், தமிழகத்தில் எல்லா பகுதிகளுக்கும் வந்து போயிட்டு இருக்கு. கொடைக்கானலுக்கு கூட வருது. தமிழகத்தை ஊடுருவி. தென் தமிழகம் வரைக்கும் சர்வீஸ் விடிருக்காங்க. ஆனா, நம்ம தமிழக பஸ்கள் தெற்கு கர்நாடகம் வரைக்கும் தான் செல்ல அனுமதி. ஷிமோகா, ஹூப்ளி, தவணகிரி, பெல்லலரி மாதிரி மத்திய / வடக்கு கர்நாடகத்துக்கு தமிழக பேருந்துகளுக்கு அனுமதி இல்லை.


அதே மாதிரி தான் ஆந்திராவும். ஆந்திரா பஸ்கள் தமிழ் நாட்டில் கோவை வரைக்கும் கூட வருது. ஆனா நமக்கு தெற்கு ஆந்திரா தவிர மேலே செல்ல அனுமதி இல்லை. எல்லைபுற நகரங்களான திருப்பதி, நெல்லூர் பகுதிகளுக்கு தான் தமிழக பஸ்கள் செல்ல அனுமதி. சென்னை – ஹைதிராபாத் ரூட்டுக்கு செம டிமாண்ட் இருக்கு. ஆனால் அந்த ரூட்டில் ஆந்திரா பஸ்களூம் தனியார் பஸ்களும் தான் இயங்குது, தமிழக பஸ்களுக்கு இன்னமும் அனுமதி இல்லை.

நாம மட்டும் என்ன லேசுப்பட்டவங்களா என்ன? கேரளாவின் எல்லா பகுதிகளுக்கும் தமிழக பஸ் சேவை இருக்கு. ஆனா, கேரள அரசு பஸ்களுக்கு வடக்கு தமிழகத்தில் பஸ் இயக்க அனுமதி இல்லை. சேலத்துக்கு வடகிழக்கே கேரள பஸ்கள் வருவதற்கு நாம் இன்னமும் அனுமதிக்கலை.

சென்னை-திருவனந்தபுரம் ரூட்டில் ஓடும் எல்லாமே தமிழக அரசு பஸ்களும் தனியார் பஸ்களும் தான். ஒரு சர்வீஸ் கூட கேரளாவுக்கு கொடுக்கலை. அதுக்கு பதிலா, பாலக்காடு-கோவை, திருவனந்தபுரம்-நாகர்கோவில் ரூட்டுகளில் நாம கம்மியா இயக்கி அவங்களுக்கு அதிக உரிமம் கொடுத்திருக்கோம்.


இதை விட இன்னொரு ஆச்சரியமான விஷயம் இருக்கு. கேரள மாநில பகுதியில் புதுவை மாநிலத்துக்கு சொந்தமான மாஹி என்கிற ஊர் இருக்கு. அங்கே இருந்து புதுவைக்கு கேரளா அரசு பஸ் இயக்கணும்னு அவங்க கோரிக்கை கொடுத்தும் நாம் அனுமதிக்கலை. கேரளா பஸ் மட்டும் அல்ல, அந்த ரூட்டில் புதுவை பஸ்சுக்கும் அனுமதி இல்லை. அதை தமிழக பஸ் மட்டுமே மொத்தமா எடுத்து புதுவை-கோழிக்கோடு ரூட்டில் நாமளே ஒரு திராபையான பஸ் இயக்கிட்டு இருக்கோம்! கேரளா அரசும், புதுவை அரசும் வோல்வோ சொகுசு பஸ் இயக்குறாங்கன்றது தெரிஞ்ச விஷயம்.

எதனால இந்த ஈகோன்னு எனக்கு தெரியலை. சென்னைக்கு கேரளா பஸ்கள் வர அனுமதி இல்லை. ஹைதிராபாதுக்கும் ஹூப்ளிக்கும் தமிழக பஸ்கள் வர அனுமதி இல்லை. சுருக்கமா பார்த்தா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் எல்லையோர பகுதிகளுக்கு மட்டும் தான் தமிழக பஸ்களுக்கு அனுமதி. கேரளாவில் முழு மாநிலத்திலும் அனுமதி. அதே நேரம் கேரள பஸ்களுக்கு தமிழகத்தில் எல்லைபகுதிகளில் மட்டும் தான் அனுமதி. ஆனால் கர்நாடக, ஆந்திர பஸ்களுக்கு தமிழகம் முழுவதும் அனுமதி. என்னமோ இதில் லாஜிக் இடிக்குதுல்ல?

அதை யோசிச்சிட்டு இருங்க.. அடுத்த பாகத்தில் விரிவா பேசுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக