வியாழன், 10 ஜூலை, 2014

விமானம் வாங்க பேருந்தை ஓட்டிச் சென்ற?????


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மாலை மலர் செய்தி! பாருங்க,
அரசு பஸ்சை 60 கி.மீ தூரம் ஓட்டிய மனநோயாளி
அரசு பஸ்சை 60 கி.மீ தூரம் ஓட்டிய மனநோயாளி
கோவை, மே. 20–
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – கோவை வழித்தடத்தில் நேற்று வழக்கமாக செல்லும் பஸ்சுக்கு பதிலாக மாற்றுபஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் டிரைவராக அய்யரசும், கண்டக்டராக சாமிக் கவுண்டரும் இருந்தனர்.
சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு 2 பேரும் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். சிறிது நேரம் கழிந்து திரும்பி வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த டிரைவரும், கண்டக்டரும் திகைத்து நின்றனர். சில நிமிடங்களுக்கு முன் சாதாரண உடையில் இருந்த ஒருவர் பஸ்சை ஓட்டிச் சென்றார் என்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
உடனடியாக சத்தியமங்கலம் போலீசார் இது குறித்து கோவை, மேட்டுப்பாளையம், கோபி நெடுஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உஷாரான போலீசார் குறுக்குசாலை உள்பட நெடுஞ்சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட பஸ் எண்ணை கூறி அதனை மடக்கிப்பிடியுங்கள் ஓவர்... ஓவர்... என்று உத்தரவுகள் பறந்தன.
சத்தியமங்கலத்தில் இருந்து கோவை வரையில் சுமார் 60 கி.மீட்டர் வரை போலீசாரிடம் சிக்காமல் பஸ்சை ஓட்டி வந்த கடத்தல்காரன் பஸ்சுடன் கோவில்பாளையம் போலீசாரிடம் சிக்கினான். பின்னர் அவன் சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
போலீஸ் விசாரணையில் அவன் சிக்கதாசம் பாளையத்தை சேர்ந்த தனியார் பஸ் ஓட்டுனர் ராஜேந்திரன் (வயது45) என்பது தெரியவந்தது. எதற்காக பஸ்சை கடத்தினீர்கள்? என்று கேட்டபோதுதான் போலீசாரை கிறுகிறுக்க வைத்தது. புதிதாக விமானம் வாங்க வேண்டும். வெளிநாடு செல்ல நேரமாகி விட்டதால் விமானத்தை பிடிக்க பஸ்சை கடத்தினேன் என்றார்.
அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது உறவினர்களை அழைத்து விசாரித்தபோது ராஜேந்திரன் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்கள்.
அதிர்ஷ்டவசமாக அசம்பா விதம் நடக்கவில்லை. பஸ் கடத்தல் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக