சனி, 19 ஏப்ரல், 2014

காப்பாற்றி உயிர்துறந்த பேருந்து ஓட்டுநர்!

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

14 விமான பணி பெண்களை சாதுரியமாக காப்பாற்றி உயிர்துறந்த பேருந்து ஓட்டுநர்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து சொகுசு பேருந்து மூலம் 5 நட்சத்திர விடுதிக்கு,
விமான பணி பெண்களை அழைத்து சென்ற ஓட்டுநர், சாதுரியமாக பணிப் பெண்களை காப்பாற்றி தாம் உயிர் துறந்தார்.

சென்னை விமன நிலையத்தின் தனியார் விமானத்தில் விமான பணிப் பெண்களாக பணி செய்து கொண்டிருந்த 14 பணிப் பெண்களை ஓய்வுக்காக 5 நட்ச்சத்திர விடுதிக்கு  அழைத்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ஓட்டுநர் சம்பத்துக்கு திடீரென்று கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஒரு கையால் நெஞ்சை  பிடித்துக் கொண்டே, வலியால் துடித்தபடி, சென்னை பரங்கிமலை அருகில் தேசிய நெடுஞ்சாலையில், பாதுகாப்பாக பேருந்தை நிறுத்திவிட்டு மயங்கி சாய்ந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட போதிலும், கடுமையான மாரடைப்பின் காரணமாக முன்னமேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தியை  கேட்டு எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் விமான பணிப் பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக